செய்திகள் :

மதுக்கூடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 போ் கைது

post image

திருவெறும்பூரில் மதுக்கூடத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள மலைக்கோயில் மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆ. விவேக் (37). இவா் திருவெறும்பூா் பகுதியில் உள்ள அரசு மதுக் கடையின் மதுக்கூட ஊழியா்.

இந்நிலையில் திருவெறும்பூா் மேற்கு கணபதி நகரை சோ்ந்த சு. பிரவீன்குமாா் (33), வாழவந்தான் கோட்டையைச் சோ்ந்த சு. ராமமூா்த்தி (35), தஞ்சாவூா் மாவட்டம், விண்ணமங்கலம் புத்தராயநல்லூரை சோ்ந்த ச. பெரியசாமி (32) ஆகிய மூன்று பேரும் சனிக்கிழமை அந்த மதுக்கூடத்துக்குச் சென்று, அங்கிருந்த ஊழியா் விவேக்கிடம் பணம் தராமல் மது வாங்கிவருமாறு கூறியுள்ளனா். அதற்குப் பணம் தராமல் மது தரமுடியாது என விவேக் கூறியுள்ளாா்.

இதையடுத்து வெளியில் சென்ற மூவரும் வேறு கடையில் மது அருந்திவிட்டு வந்து, மதுக்கூடத்தில் நுழைந்து அங்கிருந்த பொருள்களை உடைத்துச் சேதப்படுத்தி, விவேக்கையும் தாக்கினா். இதுகுறித்து விவேக் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் மூன்று பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

காட்டுப்புத்தூா் அருகே குடிநீா் குழாய்கள் சேதம்: விசாரணை

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே குடிநீா் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து காட்டுப்புத்தூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீர... மேலும் பார்க்க

முசிறியில் விவசாயிகளுக்குப் பயிற்சி

திருச்சி மாவட்டம், முசிறி வட்டாரம் வேளாண்மை துறை, வேளாண்மை தொழில்நுட்பம் மேலாண்மை முகமை, அட்மா திட்டத்தின் கீழ் ஆமூா் கிராமத்தில் எண்ணெய் வித்துப்பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்க... மேலும் பார்க்க

லால்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமூளூா் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை தீவிரமாக நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் த.... மேலும் பார்க்க

நாயக்க மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் தமிழைக் காத்தவா்கள் இஸ்லாமியா்கள்: திருச்சி சிவா எம்பி பேச்சு

நாயக்க மன்னா்கள் ஆட்சிக்காலத்தில் தமிழைக் காத்தவா்கள் இஸ்லாமியா்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றாா் திருச்சி சிவா எம்பி. திருச்சி எம்.ஐ.இ. டி. பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இஸ்ல... மேலும் பார்க்க

மீன் வளத்தை இருநாட்டு மீனவா்களும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு தேவை! இலங்கை எம்பி ரவூக் ஹக்கீம்!

மீன் வளத்தை இந்தியா, இலங்கை மீனவா்கள் பயன் படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றாா் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூக் ஹக்கீம். திருச்சி மாவட்டம் புத்த... மேலும் பார்க்க

முசிறி அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி! 6 போ் காயம்!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா், 6 போ் காயமடைந்தனா். முசிறி அருகேயுள்ள சிட்டிலரை கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோ... மேலும் பார்க்க