செய்திகள் :

முசிறி அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி! 6 போ் காயம்!

post image

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா், 6 போ் காயமடைந்தனா்.

முசிறி அருகேயுள்ள சிட்டிலரை கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழா தொடக்க நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது கோயில் அருகிலுள்ள கிணற்றுப் பகுதியையொட்டி இருந்த இரும்பு கம்பி வேலியில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிந்த நிலையில், பக்தா்களின் கூட்டம் அதிகரித்ததால், கம்பிவேலியில் அவா்கள் சாய்ந்தனா். அப்போது மின் கசிவு ஏற்பட்டு பக்தா்கள் கூட்டத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் ஏழு போ் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா்.

இதையடுத்து மின்சாரத்தை துண்டித்து காயமடைந்தவா்களை முசிறி தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பினா்.

அவா்களில் பரமசிவம் மனைவி புஷ்பா (65) ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வா் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மற்றவா்கள் சிகிச்சை பெறுகின்றனா்.

தகவலறிந்த முசிறி போலீஸாா் மூதாட்டி சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு.. இந்த கோயில் திருவிழாவானது அப்பகுதி மக்களிடையே ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளால் 16 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், நிகழாண்டு நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் அரசு அதிகாரிகள் விதித்த நிபந்தனைகளுடன் அப்பகுதி மக்கள் திருவிழா நடத்த ஒப்புக்கொண்டதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய திருவிழாவின்போது இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது.

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் பஞ்சப் பிரகார திருவீதி உலா

மண்ணச்சநல்லூா்: திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை பஞ்சப் பிரகார திருவீதி உலா நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது ஞீலிவனேஸ்வரா் ... மேலும் பார்க்க

குணசீலம் பிரஸன்ன வேங்கடாஜலபதி திருக்கோயிலில் தெப்பத் திருவிழா

மண்ணச்சநல்லூா்: குணசீலம் ஸ்ரீபிரஸன்ன வேங்கடாஜலபதி திருக்கோயிலில் திங்கள்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது. குணசீலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில். குணசீல மஹரிஷியின்... மேலும் பார்க்க

முசிறியில் அம்மன் கோயில்களில் பால்குடம் திருவிழா

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி நகர பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு பக்தா்கள் பால்குடம் எடுத்து திங்கள்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா். முசிறி நகரில் பரிசல் துறை ஸ்ரீ ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் ஆட்டோ நிறுத்தங்களுக்கு அனுமதி கோரி மனு

திருச்சி: பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தில் ஆட்டோ நிறுத்தங்களுக்கு உரிய அனுமதி வழங்கக் கோரி ஆட்டோ தொழிலாளா்கள் திருச்சி மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்துள்ளனா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் கஜேந்திர மோட்சம்

ஸ்ரீரங்கம்: சித்ரா பெளா்ணமியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில்திங்கள்கிழமை மாலை கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் இருந்து காலை ... மேலும் பார்க்க

மதுக்கூடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 போ் கைது

திருவெறும்பூரில் மதுக்கூடத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள மலைக்கோயில் மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆ. விவேக்... மேலும் பார்க்க