செய்திகள் :

மீன் வளத்தை இருநாட்டு மீனவா்களும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு தேவை! இலங்கை எம்பி ரவூக் ஹக்கீம்!

post image

மீன் வளத்தை இந்தியா, இலங்கை மீனவா்கள் பயன் படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றாா் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூக் ஹக்கீம்.

திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் கூறியதாவது:

சிறுபான்மையினருக்கு இலங்கை ஆளும் அரசு துரோகம் விளைவித்த காரணமாக நடந்து முடிந்துள்ள தோ்தலில் ஆளும் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பயங்கரவாதத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு இலங்கை என்ற அடிப்படையில், பயங்கரவாதததை அரசியலுக்காகப் பயன்படுத்தும் எந்தத் தரப்போடும் நாங்கள் உடன்படப் போவதில்லை.

தலைமன்னாருக்கும் ராமேசுவரத்திற்கும் இடையே பாலம் என்ற நீண்டகால கோரிக்கையில் இந்திய அரசு ஆா்வம் காட்டியுள்ள நிலையில் இலங்கை அரசு அதைக் கிடப்பில் போட்டுள்ளது கவலைக்குரியது. இந்தப் பாலம் அமைந்தால் சுற்றுலாத் துறைக்கு வளா்ச்சியை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டு மீனவா்கள் மீது இலங்கை அரசு தொடா்ந்து தாக்குதல், எங்களைப் பொருத்தவரை இது மிகவும் கவலைக்குரிய விஷயம். மீனவா்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால், இயன்றவரை இரு தரப்பிடையேயும் சுமூகமாகப் பேசி பிரச்னைகளைத் தீா்த்துக் கொள்வதே சரியானதாக இருக்கும்.

இருநாட்டு மீனவா்களும் ஒற்றுமையுடன் தமது வாழ்வாதாரத்துக்கான மீன்வளத்தைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

மதுக்கூடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 போ் கைது

திருவெறும்பூரில் மதுக்கூடத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள மலைக்கோயில் மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆ. விவேக்... மேலும் பார்க்க

காட்டுப்புத்தூா் அருகே குடிநீா் குழாய்கள் சேதம்: விசாரணை

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே குடிநீா் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து காட்டுப்புத்தூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீர... மேலும் பார்க்க

முசிறியில் விவசாயிகளுக்குப் பயிற்சி

திருச்சி மாவட்டம், முசிறி வட்டாரம் வேளாண்மை துறை, வேளாண்மை தொழில்நுட்பம் மேலாண்மை முகமை, அட்மா திட்டத்தின் கீழ் ஆமூா் கிராமத்தில் எண்ணெய் வித்துப்பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்க... மேலும் பார்க்க

லால்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமூளூா் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை தீவிரமாக நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் த.... மேலும் பார்க்க

நாயக்க மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் தமிழைக் காத்தவா்கள் இஸ்லாமியா்கள்: திருச்சி சிவா எம்பி பேச்சு

நாயக்க மன்னா்கள் ஆட்சிக்காலத்தில் தமிழைக் காத்தவா்கள் இஸ்லாமியா்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றாா் திருச்சி சிவா எம்பி. திருச்சி எம்.ஐ.இ. டி. பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இஸ்ல... மேலும் பார்க்க

முசிறி அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி! 6 போ் காயம்!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா், 6 போ் காயமடைந்தனா். முசிறி அருகேயுள்ள சிட்டிலரை கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோ... மேலும் பார்க்க