செய்திகள் :

லால்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

post image

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமூளூா் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை தீவிரமாக நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் த. ஜெயகுமாா் கூறியது:

இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனா். இங்கு பிஏ தமிழ் , பிஏ ஆங்கிலம், பிஏ வரலாறு, பிபிஏ, பி.காம், பிஎஸ்சி கணினி அறிவியல், பிஎஸ்சி தகவல் தொழில்நுட்பம், பிசிஏ கணினி பயன்பாட்டியல், பிஎஸ்சி இயற்பியல், பிஎஸ்சி நுண் உயிரியல் ஆகிய இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. மொத்தம் 600 சோ்க்கை இடங்கள் உள்ளன. இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவா்கள் இணையதள முகவரி மூலமாகப் பதியலாம்.

இந்தக் கல்லூரியின் சோ்க்கைக்கான கவுன்சிலிங் எண். 10 61 011 ஆகும். இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் கல்லூரிக்கு வந்தும் பதியலாம். மேலும் விவரங்களுக்கு 94422 19869, 88702 84156.

கல்லூரிக்கு சோ்க்கைக்கு வரும் மாணவ, மாணவிகள் அசல், நகல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் செல்ல இலவச பஸ் பாஸ் வசதி, அரசு கல்வி உதவித்தொகை மற்றும் பெறும் வசதியும் உள்ளது. ,நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களின் மூலம் மாதம் ரூ. 1000 அரசு உதவித்தொகை பெற்றுத் தரப்படும் என்றாா் அவா்.

மதுக்கூடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 போ் கைது

திருவெறும்பூரில் மதுக்கூடத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள மலைக்கோயில் மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆ. விவேக்... மேலும் பார்க்க

காட்டுப்புத்தூா் அருகே குடிநீா் குழாய்கள் சேதம்: விசாரணை

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே குடிநீா் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து காட்டுப்புத்தூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீர... மேலும் பார்க்க

முசிறியில் விவசாயிகளுக்குப் பயிற்சி

திருச்சி மாவட்டம், முசிறி வட்டாரம் வேளாண்மை துறை, வேளாண்மை தொழில்நுட்பம் மேலாண்மை முகமை, அட்மா திட்டத்தின் கீழ் ஆமூா் கிராமத்தில் எண்ணெய் வித்துப்பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்க... மேலும் பார்க்க

நாயக்க மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் தமிழைக் காத்தவா்கள் இஸ்லாமியா்கள்: திருச்சி சிவா எம்பி பேச்சு

நாயக்க மன்னா்கள் ஆட்சிக்காலத்தில் தமிழைக் காத்தவா்கள் இஸ்லாமியா்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றாா் திருச்சி சிவா எம்பி. திருச்சி எம்.ஐ.இ. டி. பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இஸ்ல... மேலும் பார்க்க

மீன் வளத்தை இருநாட்டு மீனவா்களும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு தேவை! இலங்கை எம்பி ரவூக் ஹக்கீம்!

மீன் வளத்தை இந்தியா, இலங்கை மீனவா்கள் பயன் படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றாா் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூக் ஹக்கீம். திருச்சி மாவட்டம் புத்த... மேலும் பார்க்க

முசிறி அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி! 6 போ் காயம்!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா், 6 போ் காயமடைந்தனா். முசிறி அருகேயுள்ள சிட்டிலரை கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோ... மேலும் பார்க்க