செய்திகள் :

நாள்கணக்கில் உலகப் பயணம்; மணிப்பூரில் 5 மணி நேரம்தான்! -காங். விமர்சனம்

post image

மணிப்பூரில் 5 மணி நேரத்துக்கும் குறைவாக பிரதமர் நரேந்திர மோடி செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. கடந்த 2023-இல் தொடங்கிய இன மோதல்களுக்குப் பின் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி, அங்கு சுமார் 5 மணி நேரத்துக்கும் குறைவாக மட்டுமே இருந்துள்ளார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருப்பதாவது:

“பிரதமர் தங்களைப் பார்க்க வருவார் என்று மணிப்பூர் மக்கள் பொறுமையாகக் காத்திருந்தனர். அவரும் இன்று அவர்களைச் சந்திக்கும் சூழலானது, கட்டாயத்தின்பேரில் ஏற்பட்டுவிட்டது.

ஆனால், அவர் மணிப்பூரில், சரியாகச் சொல்ல வேண்டுமானால் தரையிறங்கியதுமுதல் புறப்பட்டது வரை, 5 மணி நேரத்துக்கும் குறைவாகவே இருந்தார்.

உலகெங்கிலும் நாள்கணக்கில் சுற்றி பிரசாரம் செய்ய பிரதமருக்கு நேரம் இருக்கிறது(விருப்பமும் உள்ளது). ஆனால், மணிப்பூருக்கு அவர் அளிக்கும் மதிப்பு இவ்வளவுதானா?

இது, உணர்ச்சியற்ற செயல், அதிர்ச்சியும் அளிக்கிறது! காலம் தாழ்த்திச் சென்றிருந்தாலும் சரியானதாக இது அமையவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:மணிப்பூரில் அரைநாள் பயணம் முடிந்தது! அஸ்ஸாமில் பிரதமர் மோடி!

Congress Saturday described Prime Minister Narendra Modi's Manipur visit as a "pit stop", and said it was "shockingly insensitive" of him to be there "for less than five hours" when he has the time and inclination to spend days campaigning and travelling worldwide.

பசுவை விலங்காகக்கூட கருதுவதில்லை! தெருநாய் விவகாரத்தில் பிரதமர் மோடியால் சிரிப்பலை!

பெரும்பாலான விலங்கு ஆர்வலர்கள் பசுவை விலங்காகக் கருதவில்லை என்ற பிரதமர் மோடியின் கருத்து கவனம் பெற்றுள்ளது.தில்லியில் விக்யாக் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.சில விலங்கு ஆர... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: ரூ.12.72 லட்சம் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!

மேதினிநகர்: ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில், லாரியில் ரூ.12.72 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்களை கடத்த முயன்ற போது அதை பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் (செப்டம்பர... மேலும் பார்க்க

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசு ஆதரவு! பிரதமர் மோடி உறுதி!

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்த... மேலும் பார்க்க

யானை திருடு போய்விட்டது: ஜார்க்கண்டில் போலீஸில் புகார்

யானை திருடு போய்விட்டதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்ற நபர் ஜார்க்கண்டின் காவல் நிலையத்தில் வெள்ள... மேலும் பார்க்க

மணிப்பூரில் அரைநாள் பயணம் முடிந்தது! அஸ்ஸாமில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப். 13) மாலை அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்குச் சென்றடைந்தார்.மணிப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாம் சென்றுள்ள பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை (செப்.14) வரை அங்கு பல்வேற... மேலும் பார்க்க

ம.பி. முதல்வர் சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ !

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மந்தசௌர் பகுதியில் உள்ள காந்தி சாகர் வனப்பகுதியில் வெப்ப ... மேலும் பார்க்க