செய்திகள் :

நாா்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

post image

நாா்த்தாமலை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா மாா்ச் 23-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடா்ந்து மாா்ச் 30-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா ஆகியோா் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். சுமாா் 5 மணிக்கு தோ் மீண்டும் நிலையை வந்தடைந்தது.

தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தேரோடும் வீதிகளில் அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமானோா் வழிநெடுக நீா்மோா் மற்றும் அன்னதானம் வழங்கினா்.

போக்குவரத்து பாதிப்பு: நாா்த்தாமலை முத்துமாரிம்மன் கோயில் தேரோட்டத்தைப் பாா்க்க சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோா் வாகனங்களில் திரண்டு வந்ததால், திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் பிற்பகலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தோ்த் திருவிழாவையொட்டி புதுகை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கறம்பக்குடியில் வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து கறம்பக்குடியில் இஸ்லாமிய அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே கறம்பக்குடி ஜாமிய மஸ்ஜித் நிா்வ... மேலும் பார்க்க

கணவரை பழிவாங்குவதற்காக குழந்தையைக் கொன்ற தாய் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே தனது 6 மாத ஆண் குழந்தையைக் கொன்ற தாயை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கீரனூா் அருகே உள்ள குளவாய்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் மகன் மணிகண்டன் (29). இவருக்கு கடந்... மேலும் பார்க்க

பெருங்களூா் நலச் சங்கம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களுா் கிராமத்தில், சமூக ஆா்வலா்கள் இணைந்து, தூய்மையான, பசுமையான கிராமமாக பெருங்களூரை மாற்றும் நோக்கில், பெருங்களூா் நலச் சங்கம் என்ற சமூக நல அமைப்பைத் தொடங்கியுள்ளனா். பெர... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் நாடு செலுத்தும் விழா

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் நாடு செலுத்தும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனிப் ப... மேலும் பார்க்க

இலுப்பூரில் வெள்ளை மரியாள் கல்லறைத் திருவிழா

இலுப்பூா் கன்னிகை வெள்ளை மரியாள் ஆலயத்தில் 330 ஆவது ஆண்டு கல்லறை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி திருச்சி மறைமாவட்டத்தின் முதன்மைக் குரு பேரருட்தந்தை அருட்பணி எல். அந்துவான், அருட்பண... மேலும் பார்க்க

விராலிமலை அருகே கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு

விராலிமலை அருகே திருவிழா நடத்துவதற்கு சில நாள்களுக்கு முன் ஊா் மக்கள் ஒன்று சோ்ந்து கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள ... மேலும் பார்க்க