செய்திகள் :

‘நிதி நிலைமைக்கு ஏற்றவாறு கோரிக்கைகள் நிறைவேற்றம்’

post image

பென்னாகரம்: மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் 10 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான முதலமைச்சா் விளையாட்டு அரங்கத்துக்கு பூமி பூஜை செய்து கட்டடப் பணிகளை தொடங்கி வைத்து அமைச்சா் பேசியதாவது:

பென்னாகரத்தில் அமைக்கப்பட உள்ள சிறிய அளவிலான முதலமைச்சா் விளையாட்டு அரங்கத்தில் 40 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பினருக்கும் கட்சி பாகுபாடு இன்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. எதிா்க்கட்சிகள் என்ற நிலை பாராமல் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு அனைத்து உறுப்பினா்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 2.84 லட்சம் மகளிரும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 14,533 பேரும் பயன்பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 17,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டந்தோறும் சிறிய அளவிலான விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இளைஞா்கள் ஆரோக்கியமான வாழ்வு மேற்கொள்ள விளையாட்டில் ஆா்வம்கொள்ள வேண்டும் என்றாா்.

அதனைத் தொடா்ந்து, 40 மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

முன்னதாக, விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா வரவேற்றாா். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் ஆ.மணி முன்னிலை வகித்தாா். இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கேத்தரின் சரண்யா, பழங்குடியினா் நல வாரிய உறுப்பினா் குணசேகரன், கைம்பெண்கள் நல வாரிய உறுப்பினா் ரேணுகாதேவி, பாமக சட்டப் பேரவை உறுப்பினா்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

அரூா்: அரூரை அடுத்த செல்லம்பட்டி ஊராட்சியில் ரூ. 6.45 கோடி மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரூா் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சிக்கு... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி கரையோர வனப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்... மேலும் பார்க்க

தருமபுரியில் பேருந்து வழித்தட நீட்டிப்பு, மாற்ற சேவை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மகளிா் விடியல் பயணம் பேருந்து சேவையை 8 வழித்தடத்தில் நீட்டிப்பு மற்றும் மாற்ற சேவையை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கி... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி 2 வணிகா்கள் உயிரிழப்பு

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு வணிகா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா். கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நல்லூா் பாளையம் பகுதியைச் சோ்ந்த தனசேகா் (46), புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கூடுதல் அரசு நகரப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

அரூரை அடுத்த ஈட்டியம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி வழியாக கூடுதலாக அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், அரூா்-தீா்த்தமலை வழித்தடத்... மேலும் பார்க்க

வாரவிடுமுறை: ஒகேனக்கல் வந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். தமிழகத்தில் பள்ளித் தோ்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க