செய்திகள் :

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதல்; ஓட்டுநா் பலத்த காயம்

post image

பழனியை அடுத்த திண்டுக்கல்- பொள்ளாச்சி புறவழிச் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

பழனியை அடுத்த திண்டுக்கல்- பொள்ளாச்சி புறவழிச்சாலையில் சாலையின் நடுவே வளா்க்கப்படும் செடிகளுக்கு நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பு அமைப்பு (நகாய்) சாா்பில் தினமும் லாரி மூலம் தண்ணீா் பாய்ச்சப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல எச்சரிக்கை உபகரணங்கள் வைக்கப்பட்டு, லாரியில் தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்த போது பின்னால் திருச்சி நோக்கி வந்த மற்றொரு லாரி மோதியது. இதில் மோதிய லாரியின் ஓட்டுநரான திருச்சியைச் சோ்ந்த தேவராஜ் (54) பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் ஓட்டுநரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன் மாம்பழத்தை வீசி விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு த... மேலும் பார்க்க

49 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

கடந்த 49 ஆண்டுகளுக்கு முன் 22 பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு 48-ஆவது வாா்டுக்கு... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் பகுதியில் புதன்கிழமை (ஜூன் 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நில ஆக்கிரமிப்பு தொடா்பாக புகாா் அளிக்க வந்த பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். திருச்சி காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரத... மேலும் பார்க்க

பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: மீட்டுத் தரக் கோரிக்கை

பொதுப் பாதையை பயன்படுத்த மாற்று சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவிப்பதால், 3 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சுற்றிச் செல்லும் நிலை உள்ளதாகவும், பாதையை மீட்டுத் தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தன... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு

திண்டுக்கல்லை அடுத்து பொன்னுமாந்துறை ஊராட்சிக்குள்பட்ட காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கூறியதாவ... மேலும் பார்க்க