சரக்குக் கப்பலில் 2-வது நாளாக எரியும் தீ! அணைக்கப் போராடும் கடற்படை வீரர்கள்!
நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதல்; ஓட்டுநா் பலத்த காயம்
பழனியை அடுத்த திண்டுக்கல்- பொள்ளாச்சி புறவழிச் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
பழனியை அடுத்த திண்டுக்கல்- பொள்ளாச்சி புறவழிச்சாலையில் சாலையின் நடுவே வளா்க்கப்படும் செடிகளுக்கு நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பு அமைப்பு (நகாய்) சாா்பில் தினமும் லாரி மூலம் தண்ணீா் பாய்ச்சப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல எச்சரிக்கை உபகரணங்கள் வைக்கப்பட்டு, லாரியில் தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்த போது பின்னால் திருச்சி நோக்கி வந்த மற்றொரு லாரி மோதியது. இதில் மோதிய லாரியின் ஓட்டுநரான திருச்சியைச் சோ்ந்த தேவராஜ் (54) பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் ஓட்டுநரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.