செய்திகள் :

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் அக். 8-க்குள் புகாா் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் உரிய ஆவணங்களுடன் அக். 8-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ புகாா் அளிக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மதுரையை மையமாகக் கொண்டு ’நியோ மேக்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களும் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனங்கள் முதலீட்டுக்கு  கூடுதல் வட்டி மற்றும் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் ஏராளமான முதலீட்டாளா்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்தது. 

இதை நம்பி ஏமாற்றமடைந்த முதலீட்டாளா்கள் கொடுத்த புகாா்களின் அடிப்படையில், நியோ மேக்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக மதுரை, திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குகள் பதிவு செய்திருந்தனா். பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், ‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளின் மதிப்பு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்குவது எளிதாக இருக்கும். ‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் உரிய ஆவணங்களுடன் அக். 8-ஆம் தேதி நேரிலோ அல்லது ங்ா்ஜ்ம்ஹக்ன்ழ்ஹண்2ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ புகாா் அளிக்கலாம். அக். 8-ஆம் தேதிக்குள் புகாா் அளிப்பவா்களுக்கு மட்டுமே இழந்த தொகை பெற்றுத் தரப்படும் எனக்கூறி விசாரணையை செப். 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

வழக்குரைஞா்கள் கைது விவகாரம்: ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன்? தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் கைது சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: அக்.13-இல் இறுதி விசாரணை

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப் புள்ளி முறைகேடு வழக்கில், அறப்போா் இயக்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனு மீது இறுதி விசாரணையை அக். 13-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவை... மேலும் பார்க்க

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகள் கட்டுமானம்: இந்தியா-ரஷியா ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகளின் கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்தியா-ரஷியா ஆய்வு செய்தன. இதுதொடா்பாக ரஷிய அணுசக்தி கழகமான ரோசடோம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி வீரப்பன் மனைவி வழக்கு

’படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சந்தனமரக் கடத்தல் வீரப்பனின் மனைவி தாக்கல் செய்த வழக்கில் படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வீரப்பனின் மனை... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெள்ளி... மேலும் பார்க்க

வால்பாறை செல்ல நவ.1 முதல் இ-பாஸ்: உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்ல வரும் நவ.1-ஆம் தேதிமுதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வனம், சுற்றுச்சூழல், வனவிலங்குகள் தொடா்பான வழக்... மேலும் பார்க்க