செய்திகள் :

நிறுவனங்களைப் பழிவாங்கும் ஊழியர்கள்! ஏன்?

post image

பன்னாட்டு நிறுவனங்களில் பணியாளர்களின் திடீர் வேலை விலகல் சமீபத்தில் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் திடீரென பணியைவிட்டு விலகுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தைப் பழிவாங்கும் நோக்கில் (Revenge Quitting), இவ்வாறு செய்வதாகக் கூறுகின்றனர்.

நிறுவனத்தில் பணிச்சுமை, உரிய அங்கீகாரம், மேலதிகாரிகள் மீதான கோபம், அலுவலக அரசியல், சக ஊழியர்களின் நெருக்கடி, விடுமுறை கோரும்போது அலைக்கழிப்பது, ஊதிய உயர்வு, குறைந்த இடைவேளை, இதர காரணங்களுக்காகவும் பழிவாங்கும் நோக்கோடு சிலர் தங்களின் வேலையைவிட்டு விலகுகின்றனர். தாங்கள் வேலையைவிட்டு விலகியபின்பு தான், தங்களின் அருமை என்னவென்று நிறுவனங்களுக்கு தெரிய வரும் என்று பலரும் பதிலளிக்கின்றனர்.

இதையும் படிக்க:பிசிஓஎஸ் பிரச்னை இருந்தால் கருத்தரிக்க முடியாதா? - நம்பிக்கையும் உண்மையும்!

இதுதவிர, சிலரை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யப்போவதை முன்னரே அறிந்து, நிறுவனத்தின் நடவடிக்கைக்கு முன்பாகவே தாங்களே விலகிக் கொள்கின்றனர். சில நிறுவனங்களில் உணவு விடுதி வசதிவேண்டியும் விலகுவதாக சிலர் கூறுகின்றனர்.

இதனிடையே, ஊழியர்கள் திடீரென பணி விலகுவதைக் கண்டறியும் பணியில் மனிதவள மேம்பாட்டு வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறாக, திடீரென வேலையைவிட்டு விலகுபவர்கள், அடுத்து என்ன செய்யப் போகின்றனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்திய பங்குச் சந்தையில் கடந்த 5 நாட்களில் ரூ.16.97 லட்சம் கோடி இழப்பு!

புதுதில்லி: அமெரிக்க கட்டண அச்சுறுத்தல்களை தொடர்ந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருவதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக குறைத்தது.கடந்த ஐந்து நாட்களில... மேலும் பார்க்க

கடும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை! ரூ. 10 லட்சம் கோடி இழப்பு!!

சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும் நிஃப்டி 23,100 புள்ளிகளுக்குக் கீழும் குறைந்து பங்குச்சந்தை இன்று(பிப். 11) கடும் சரிவுடன் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்... மேலும் பார்க்க

1000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி 1.4% வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. வணிக நேரத் தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கிய வணிகம் பிற்பாதியில் கடும் சரிவை எட்... மேலும் பார்க்க

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 4% உயர்வு!

2024-ல் இந்திய ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை 4 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 15 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சிறு-குறு நிறுவனங்கள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (பிப். 11) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 47 புள்ளிகள் சரிவுடனும் நிஃப்டி 30 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் ஆரம்பமானது. கடந்த நான்கு நாள்களாகத் தொடர்ந்து பங்குச் சந்தை ... மேலும் பார்க்க

சேவைகள் துறையில் 2 ஆண்டுகள் காணாத மந்தம்

புது தில்லி: இந்திய சேவைகள் துறை கடந்த ஜனவரி மாதம் முந்தைய இரண்டு ஆண்டுகள் காணாத குறைவான வளா்ச்சியைக் கண்டுள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் த... மேலும் பார்க்க