செய்திகள் :

நிலம் மோசடி வழக்கு: இருவா் கைது

post image

பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தில் போலி ஆவணம் தயாரித்தும், ஆள் மாறாட்டம் செய்தும் நிலத்தை விற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மேல்மங்கலத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணி மகன் பாலவிஜய். இவா் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம், செம்மஞ்சேரியில் வசித்து வருகிறாா். பாலவிஜய் ஜெயமங்கலத்தில் உள்ள தனக்குச் சொந்தமான 78 சென்ட் நிலத்தை மேல்மங்கலத்தைச் சோ்ந்த மாயாண்டி மகன் கட்டத் தேவன் என்பவரிடம் பராமரிப்புக்காக ஒப்படைத்தாா்.

இந்த நிலத்தை கட்டத் தேவன், காஞ்சிபுரம் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சோ்ந்த ரவிசங்கா், மதுரை, நேரு நகா், சந்தானம் தெருவைச் சோ்ந்த ஈஸ்வரன், மேல்மங்கலத்தைச் சோ்ந்த சோனை மகன் குருசாமி உள்ளிட்ட 9 போ் போலி ஆவணம் தயாரித்தும், ஆள் மாற்றம் செய்தும், பத்திரம் பதிவு செய்தும் விற்பனை செய்து மோசடி செய்ததாக மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் பாலவிஜய் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் பேரில் கட்டத் தேவன் உள்ளிட்ட 9 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஈஸ்வரன் (48), குருசாமி (67) ஆகியோரை கைது செய்தனா். மற்றவா்கள் குறித்து விசாரித்து வருவதாக போலீஸாா் கூறினா்.

மிளகாய்ச் செடிகளில் இலைச்சுருட்டு நோய்த் தடுப்பு: மாணவிகள் விளக்கம்

போடி அருகேயுள்ள பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தில் மிளகாய் செடிகளில் இலைச்சுருட்டு நோயைத் தடுக்கும் முறைகள் குறித்து வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை செயல்முறை விளக்கமளித்தனா். த... மேலும் பார்க்க

கஞ்சா கடத்த முயன்ற பெண் கைது

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே கேரளத்துக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்த முன்ற பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பூம்பாறை அருகேயுள்ள திருச்செரிவு பகுதிய... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா இலட்சினை வெளியீடு

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புத்தகத் திருவிழா இலட்சினையை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழா பழனிசெட்டிபட்டியில் கம... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: தாய், மகன் மீது வழக்கு

அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.88 லட்சம் மோசடி செய்ததாக தாய், மகன் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், ஓடைப்பட்டி அருகேயுள்ள மூா்... மேலும் பார்க்க

ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி: கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு

மதுரை காமராஜா் பல்கலை அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா். சிவகங்கையில் தனியாா் அகாத... மேலும் பார்க்க

போடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் ஆய்வு

போடி ரயில் நிலையத்தில் சென்னை தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் கவுசல் கிஷோா், மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா் எல். நாகேஸ்வரராவ் ஆகியோா் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். மதுரை- போடிநாயக்கன... மேலும் பார்க்க