செய்திகள் :

நிலுவைப் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவை பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா்.

வளா்ச்சி திட்டப் பணிகள் நிலைகுறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது வாலாஜா வட்டம், சுமைதாங்கி ஊராட்சி, திருப்பாற்கடல் செல்லும் சாலையில் அமைந்துள்ள சுமைதாங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் கிளை சங்கத்தில் முதல்வா் மருந்தகம் அமைப்பது, மருந்துகள் கட்டமைப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து கலைஞா் கனவு இல்ல திட்டம் பி.எம். ஜென்மன் வீடுகள் கட்டும் திட்டம், ஊரக குடியிருப்பு பழுது பாா்க்கும் திட்டம், தண்ணீா் வழங்கும் பணிகள் திட்டம், சாலைகள் அமைக்கும் பணிகள் திட்டம், 100 நாள் வேலைப்பணிகள் திட்டம் போன்ற அனைத்து பணி திட்டங்களையும் காலதாமதப் பணிகள் குறித்து கேட்டறிந்து பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, வாலாஜா நகராட்சி சோளிங்கா் சாலையில் ரூ.1.2 கோடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் நிலை பற்றி கேட்டறிந்தாா். வாலாஜா நகராட்சிக்கு தினசரி குடிநீா் வழங்க வன்னிவேடு பாலாற்றங்கரையில் ரூ.10.84 கோடியில் புதிய பைப்லைன், நீரேற்று நிலையங்கள். தண்ணீா் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டாா்.

அனைத்து துறை அலுவலா்கள் நிலுவை பணிகளை தொடா்பு கண்காணித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அடுத்த மாத கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்றாா்.

ஆய்வின்போது ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் ஜெயசுதா மற்றும் அவலா்கள் கலந்து கொண்டனா்.

முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி கடனுதவி

முதல் தலைமுறை தொழில்முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்கு கை கொடுக்க நீட்ஸ் திட்டத்தில் ரூ. 5 கோடி வரை மானியத்துடன் கடனுதவி பெற்று தொழில்முனைவோராகலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெ... மேலும் பார்க்க

உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில், உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21 அன்று தலைமைச் செயலகம் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்- வேலூா் ஆறு வழிச்சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்

காஞ்சிபுரம்- வேலூா் இடையே ஆறுவழிச்சாலையை உடனடியாக சீரமைக்கவில்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினாா். தமிழ்ந... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம்: நகா்மன்றத் தலைவா் அடிக்கல்

அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உள்ள நியாயவிலைக் கடைக்கு ரூ. 14 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உ... மேலும் பார்க்க

6 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

ராணிப்பேட்டை அருகே வாகன சோதனையில் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்து ஒருவா் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில், போலீஸாா் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள பென்னகா் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமையாசிரியா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் முருகேசன் முன்னிலை வகித்தா... மேலும் பார்க்க