செய்திகள் :

நிலுவையில் கொலை வழக்கு; காதலித்த சிறுமி; உறவினர்கள் கண்டித்ததால் விபரீத முடிவு - திருச்சி பரிதாபம்

post image

கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள மொஞ்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்த 17 வயது சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவருக்கும், திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள வாளையூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (25) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் பின்னர் நாளடைவில் காதலாக மாறியது.

karur

கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு பேரும் காதலை வளர்த்து வந்துள்ளனர். இதில், பழனிச்சாமி மீது தனது சொந்த சகோதரரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், தங்களது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சிறுமி தனது காதலனை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்து உள்ளார். அதனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுமி, பழனிச்சாமியை திருமணம் செய்ய ஏதுவாக வீட்டை விட்டு சென்றதாக சொல்லப்படுய்கிறது.

பின்னர், இருவரும் திருமணம் செய்துகொள்ள முயன்றுள்ளனர். ஆனால், சிறுமிக்கு18 வயது நிரம்பாததால் திருமண செய்துகொள்ளமுடியாமல் போயிருக்கிறது. அதன் பின்னர் சிறுமியை அவரது பெற்றோர் மீண்டும் கரூருக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சிறுமி தனது காதலனை தேடி வாழையூர் வந்தார். மாலையில் அங்குள்ள காட்டுப் பகுதியில் பழனிச்சாமியும், சிறுமியும் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே, அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரண்டு பேரையும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தற்கொலை தடுப்பு மையம்

பின்னர், சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளை கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். பழனிச்சாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து சிறுகனூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலை ஏற்க மறுத்ததால் சிறுமி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

டயப்பரில் மலம்: 8 மாத குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொன்ற தாய்; நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி!

டயப்பரை அழுக்காக்கியதால் கொதிக்கும் நீரில் குழந்தையைப் போட்டு கொன்ற பெண்ணை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்தவர் ஜடோரியா ரெனே கிளீமன்ஸ் (21). இவருக்கு 8 மாத ஆண் கு... மேலும் பார்க்க

கரூர்: காதல் திருமணம் செய்த இளஞ்ஜோடி; வீட்டுக் காவலில் மணமகன்; மணப்பெண் கண்ணீர்; பின்னணி என்ன?

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சதயவர்த்தினி (வயது: 19). இவரும், தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி (வயது: 21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து... மேலும் பார்க்க

தென்காசி: விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை திடீர் மரணம்; நடந்தது என்ன?

தென்காசி மாவட்டம் வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் மற்றும் புனிதா தம்பதி. இவர்களுடைய இரண்டரை வயது ஆண் குழந்தை நேற்று இரவு வீட்டின் முன்பு தனது தாயுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.அப்போது திட... மேலும் பார்க்க

தென்காசி: வீட்டில் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 24 வார்டுகள் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் இந்த 2025-26 நிதியாண்டிற்கான வரி வசூல் செய்வதற்காக நகராட்சி வசூல் பணி மேற்பார்வையாளர் ... மேலும் பார்க்க

கரூர்: 'ரௌடியை பிடிக்க முயன்ற போலீஸ்; தாக்கிவிட்டு ஓடியதால் சுட்டுப் பிடிப்பு!' - நடந்தது என்ன?

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோயில் பகுதியைச் சேர்ந்த பென்சில் தமிழழகன்(வயது: 30). இவர்மீது கரூரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பல பதிவாகியுள்ளன. இதனால் இவர் ரௌடி பட்ட... மேலும் பார்க்க

கோவை அரபிக் கல்லூரி மூலம் ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: மேலும் 4 பேர் கைது - பின்னணி என்ன?

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு கார் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இ... மேலும் பார்க்க