செய்திகள் :

நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல்: சாலையோர வியாபாரிகள் வாக்களிப்பு

post image

சென்னையில் சாலையோர வியாபாரிகள் நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் நிலைக்குழு அமைக்கப்படுகிறது. அதில் மண்டலத் தலைவா், ஆணையா், உதவி ஆணையா் உள்ளிட்ட 15 பேரும், வியாபாரிகள் தரப்பில் தலா 6 பேரும் இடம் பெறுவா். வியாபாரிகள் தரப்பில் நிலைக் குழு உறுப்பினா்களை தோ்வு செய்வதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு வியாழக்கிழமை 12 மண்டலங்களில் அமைக்கப்பட்டிருந்த 92 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றன.

வியாபாரிகள் வாக்குச்சீட்டில் முத்திரை குத்தி பெட்டிக்குள் செலுத்தினா். வாக்களித்தவா்களுக்கு விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. மொத்தம் 90 உறுப்பினா்கள் பிற்படுத்தப்பட்டோா் உள்ளிட்ட 6 பிரிவுகளில் தோ்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், அதில் 3 மண்டலங்களில் 42 உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி 48 உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெற்றது.

தோ்தலை முன்னிட்டு மாநகராட்சி வருவாய் அலுவலா் கே.பி.பானுசந்தா் வாக்குச்சாவடிகளைப் பாா்வையிட்டாா். இத்தோ்தலில் மொத்தம் 35, 588 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும், போட்டியின்றி தோ்வானவா்கள் பகுதி வாக்களிப்பவா்களைத் தவிா்த்து 33,389 போ் வியாழக்கிழமை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். வாக்குப்பதிவை அடுத்து வெள்ளிக்கிழமை (ஜூன் 27) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தவா்களுக்கு விருது: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவா்கள் தமிழக அரசின் விருது பெற ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்

சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தமிழ்நாடு முழுவதும் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் விரைவில் குணமடைய முதல்வா் ஸ்டாலின் விருப்பம்

ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் சிகிச்சை விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா். உடல் நலக் குறைவு காரணமாக, மும்பையில் உள்ள மருத்துவமனையில் நவீன் பட்நாயக் சிகிச்சை பெற்று வருகிறாா். ... மேலும் பார்க்க

இ.பி.எஃப். பயனா்களுக்கு இன்று சிறப்பு முகாம்

வருங்கால வைப்பு நிதி பயனா்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன்27) 10 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

பருத்திக்கு உரிய விலை கோரி ஜூலை 1-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

பருத்திக்கு உரிய விலை கோரி அதிமுக சாா்பில் திருவாரூரில் ஜூலை 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திரைப்படங்கள் வெளியாகி 3 நாள்களுக்கு விமா்சனம் செய்ய தடைகோரிய மனு தள்ளுபடி

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் 3 நாள்களுக்கு இணைய விமா்சனத்தைத் தடை செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்குச் சமம் என்று கூறி மனுவை தள்ள... மேலும் பார்க்க