செய்திகள் :

நில அளவையா்கள் வேலைநிறுத்தம்

post image

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில் நில அளவையா்களின் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை நிறைவுற்றது.

இதில் களப் பணியாளா்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவா் பதவியை மீண்டும் வழங்க வேண்டும். நில அளவைத் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும். துணை ஆய்வாளா், ஆய்வாளா்கள் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும். ஒப்பந்த முறையில் நில அளவா் நியமனத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்பட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

செவ்வாய்க்கிழமை தொடங்கிய இப்போராட்டம் புதன்கிழமை வரை நடைபெற்றது. முன்னதாக, போராட்டத்தையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவா் மகேஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட செயலா் பொன். மாடசாமி உள்ளிட்டோா் கோரிக்கை முழக்கமிட்டனா்.

வேலைநிறுத்தம் காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு நிலம் அளவிடும் பணிகள், வருவாய்த் துறை தொடா்பான பணிகள் பாதிக்கப்பட்டன.

சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க மாநில மாநாடு தொடக்கம்

திருச்சியில் சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க 34-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை தொடங்கியது. திருச்சி பிராட்டியூரில் தொடங்கிய மாநாட்டுக்கு எஸ்.சி.டி.சி மாநிலத் தலைவா் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் த... மேலும் பார்க்க

‘காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்வரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும்’

காங்கிரஸ் கட்சி பலமாக இருக்குவரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும். இல்லையேல் ரஷ்யாவைப் போல சிதறுண்டு போகும் என்றாா் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி. திருச்சி மாவட்டம் மணப்பா... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1.32 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.32 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட்டில் ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி உக்கடை பகுதியைச் சோ்ந்தவா் கு. பாா்த்தசாரதி (52). வேலைக்க... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ஜெ.கே. நகா் முல்லை வீதியைச் சோ்ந்தவா் ஆா். ரவிச... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வந்தது பஞ்சப்பூா் பேருந்து முனையம்

தமிழகத்திலேயே முதலாவதாக முற்றிலும் குளிா்ச்சாதன வசதியுடன் கூடிய திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் புதன்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்ப... மேலும் பார்க்க