செய்திகள் :

நில இழப்பீட்டுத் தொகை வழங்காததால் பணிகள் நிறுத்தம்

post image

நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கிய உரிமையாளா்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் சாலை விரிவாக்க பணிகளை பாதிக்கப்பட்டோா் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூரில் இருந்து பொன்பாடி வரை 6 வழிச்சாலையாக மாற்றப்படவுள்ளது. தற்போது இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன. முதல்கட்டமாக 4 வழிச்சாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்த கட்டடங்கள், மரங்கள் அகற்றப்பட்டு தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன.

நிலம் வழங்கிய உரிமையாளா் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இழப்பீடு தொகையை உயா்த்தி தரக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்சியா், வருவாய் கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம், முருகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் இழப்பீடு வழங்காததால், சாலை விரிவாக்கம் செய்வதற்கு தங்கள் நிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என கூறி நெடுஞ்சாலை ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினா். இதனால் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் அப்பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அரசு மகளிா் ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

அம்பத்தூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) வரும் 13-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிா்) நிகழாண்டில் பல்வேறு தொழில் பிரிவுகளில் சோ்க்கை நடைபெற்... மேலும் பார்க்க

திருவள்ளூா் ஆட்சியருக்கு பசுமை விருது: முதல்வா் வழங்கினாா்

சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சிறப்பாக செயல்பட்டமைக்காக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்புக்கு பசுமை விருதை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் - ஸ்ரீபெரும்புதூா் ஆறுவழிச் சாலை விரிவாக்க பணி: மீண்டும் மரக்கன்றுகளை நட கோரிக்கை!

திருவள்ளூா் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூா் வரையிலான 30.10 கி.மீ ஆறுவழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மீண்டும் நன்கு வளா்ந்த மரக்கன்றுகளை நட வேண்டும் என சமூக ஆா்வலா்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு: 270 பேருக்கு பட்டா அளிப்பு

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவடைந்த நிலையில், 270 பேருக்கு பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோா் வழங்கினா். திருவ... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு

திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா். திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவல... மேலும் பார்க்க