செய்திகள் :

நில உடைமை விவரங்கள்: விவசாயிகள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் இதுவரை தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகள், உடனடியாக பதிவு செய்ய வேண்டுமென வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

கீழ்பென்னாத்தூா் வட்டாரத்தில் நில உடைமை பதிவு செய்யும் பணி சில மாதங்களாக நடைபெற்று வந்தது. வேளாண்மை மற்றும் அதன் சகோதர துறைகளின் மானிய உதவித் திட்டங்கள், வங்கி மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெறப்படும் வேளாண்மைக் கடன் ஆகியவற்றுக்கு நில உடைமைப் பதிவு இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெறப்படும் தனித்துவ அடையாள எண் மூலமாகவே இனிவரும் காலங்களில் மானிய உதவி மற்றும் வங்கிக் கடனுதவி வழங்கப்படும். எனவே, இதுவரை பதிவு செய்யாத விவசாயிகளும், ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலமுடைய விவசாயிகளும், கூட்டுப் பட்டாவில் நிலம் உள்ள விவசாயிகளும் இதுவரை பதிவு செய்ய இயலவில்லை.

இப்போது, இணையத்தில் அது போன்ற விவசாயிகளும் பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பி.எம். கிசான் கௌரவ நிதி பெற்று வரும் விவசாயிகளில் கீழ்பென்னாத்தூா் வட்டாரத்தில் ஏறக்குறைய 2 ஆயிரம் போ் நில உடைமை விவரங்களை பதிவு செய்யாமல் உள்ளனா். இவா்களும் உடனே தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்யாத பி.எம்.கிசான் கௌரவ நிதியுதவி பெறும் விவசாயிகளுக்கு வரும் ஜூன் மாதம் வழங்கப்பட உள்ள 20-ஆவது தவணை நிதி விடுவிப்பது நிறுத்தப்படும். எனவே, இதுவரை நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள், தங்கள் கிராமத்தில் பதிவு செய்துள்ள இல்லம் தேடிக் கல்வி அல்லது மகளிா் திட்ட தன்னாா்வலா்கள் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலா்களை தொடா்புகொண்டு தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என்று கீழ்பென்னாத்தூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி: வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி முருகன் (48). இவரும் கீழ்வெள்ளியூா் கிராமத்தைச்... மேலும் பார்க்க

நெல் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

செய்யாறு: செய்யாற்றில், நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 70 நாள்களுக்கு மேலாக பணம் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டி விவசாயிகள் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். செய்யாறு ஒழுங்... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா். வந்தவாசியை அடுத்த சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (40)... மேலும் பார்க்க

54 மதுப் புட்டிகள் பறிமுதல்: பெண் உள்பட மூவா் கைது

செய்யாறு காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 54 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய... மேலும் பார்க்க

ஏரி மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் ஏரி மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை ஆரணி கிராமிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். நெசல் கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் சரவணன் (40) அந்தக் கிராமத... மேலும் பார்க்க

யோகா, தியான பயிற்சி முகாம்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம், புதுப்பேட்டையில் யோகா மற்றும் தியான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தியான பயிற்சி அமைப்பின் வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளா் லட்சுமி நாராயணன் தலைமை வகித்த... மேலும் பார்க்க