செய்திகள் :

`நீங்கதான் ஹீரோயின்' - நடிக்க வைப்பதாகக் கூறி மோசடி; உத்தரகாண்ட் மாஜி முதல்வர் மகள் புகார்

post image
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் ரமேஷ் நிஷாங். இவர் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகள் ஆருஷி நிஷாங்க்.

நடிப்பில் ஆர்வம்கொண்ட ஆருஷி சொந்தமாக ஹிம்ஸ்ரீ பிலிம் என்ற திரைப்பட தயாரிப்பு கம்பெனியையும் நடத்தி வருகிறார். இவரிடம் மும்பையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் மான்சி வருண் மற்றும் வருண் பிரமோத் குமார் ஆகியோர் தாங்கள் மினி பிலிம்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டனர். இருவரும் ஆன்கோன் கி குஸ்டாகியன் என்ற பெயரில் படம் தயாரிக்க இருப்பதாக ஆருஷியிடம் தெரிவித்தனர். அதோடு இப்படத்தில் நடிக்க ஆருஷிக்கு வாய்ப்பு கொடுப்பதாகத் தெரிவித்தனர். மேலும் படத்தை தயாரிக்க ரூ.5 கோடி பணம் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கொடுப்பதாகத் தெரிவித்தனர். படத்தில் நடிக்கக் கொடுக்கும் கதாபாத்திரம் பிடிக்கவில்லையெனில் பணத்திற்கு 15 சதவிகிதம் வட்டி கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

தந்தையுடன் ஆருஷி

அவர்களின் பேச்சை நம்பி அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட ஆருஷி கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இரண்டு தவணையாக மொத்தம் 4 கோடி ரூபாயைக் கொடுத்தார். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்ட பிறகு ஆருஷியிடம் கேட்காமல் படப்பிடிப்பை நடித்தி முடித்தனர். ஆருஷி நடிக்க முடிவு செய்திருந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்தனர். அதோடு அப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் ஆருஷியின் படத்தை நீக்கிவிட்டனர். இதையடுத்து தான் கொடுத்த பணத்தை திரும்பக் கொடுக்கும்படி ஆருஷி கேட்டார். ஆனால் தயாரிப்பாளர்கள் இரண்டு பேரும் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்தனர். அதோடு ஆருஷிக்கு எதிராகவும், அவரின் தந்தைக்கு எதிராகவும் வழக்கு தொடருவோம் என்று மிரட்டினர். இதையடுத்து வேறு வழியில்லாமல் ஆருஷி போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாரும் கைது செய்யப்படவில்லை.

சென்னை: பாஜக பிரமுகர் மீது இளம்பெண் பாலியல் புகார்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.அதில், ``நான் தற்போது ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். ... மேலும் பார்க்க

`வலித் தெரியாமல் அவன் வாழ்நாள் முடிந்துவிடக் கூடாது!’ - ரயில் கொடூரன் மீது கொதிக்கும் பெண்ணின் கணவர்

இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நொடியிலும் ஏதோவொரு ஒரு மூலையில் பாலியல் அத்துமீறலில் யாரேனும் ஒரு சகோதாரி பாதிக்கப்பட்டுகொண்டிருக்கலாம் என்கிற அச்ச சூழல் உருவாகியிருக்கிறது.6-2-2025 அ... மேலும் பார்க்க

திருவாரூர்: 20 நாட்களில் 2 போலீஸார் தற்கொலை முயற்சி... நீடாமங்கலம் காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது?

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார்.போலீஸானஇவர் கடந்த ஏழு ஆண்டுகளாகத் திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வருகிறார். தற்போது, நீடாமங்கலம் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார். இந... மேலும் பார்க்க

திருப்பதி லட்டு விவகாரம்: போலி ஆவணம், போலி நெய்... 4 பேர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

ஆந்திர மாநிலத்தில், கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு லட்டு தயாரிப்புக்காக கொள்முதல் செய்த நெய்யில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. அறங்காவலர... மேலும் பார்க்க

விருதுநகர்: 40 பவுன் திருட்டு நகை, துப்பாக்கி... வசமாகச் சிக்கிய காவலர்; மர்மநபருக்கு வலைவீச்சு

விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி அருகே நகை, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம்.அப்போது நம்மிடம் ... மேலும் பார்க்க

ஊட்டி: கடமானை வேட்டையாடி, உப்புக் கண்டம் போட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..! என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் கடமானை வேட்டையாடி அதன் இறைச்சியை பதப்படுத்த உப்புக் கண்டம் போட்டு வருவதாக வனத்துறையினருக்கு சிலர் தகவல் தெரிவித்துள... மேலும் பார்க்க