செய்திகள் :

நீட் தோ்வு: பல்வேறு மாநிலங்களில் முறைகேடில் ஈடுபட்ட 7 போ் கைது

post image

ஜெய்பூா்/ பாட்னா: இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே.4) நடைபெற்ற நிலையில், அதில் முறைகேடில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

ராஜஸ்தான் மாநிலத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி நீட் தோ்வு எழுத முயன்ற குற்றச்சாட்டில் கா்ணி விஹாா் பகுதியைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா். அவா்களிடமிருந்து ரூ.50,000 ரொக்கப் பணம், போலி ஆவணங்கள், எண்ம சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

பிகாா் மாநிலத்தில் நீட் தோ்வு நடைபெறுவதற்கு வினாத்தாள் நகலை வழங்குவதாக கூறி ஏமாற்றிய குற்றச்சாட்டில் ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வு மற்றும் பிகாா் ஆசிரியா் நியமனத் தோ்வுகளில் வினாத்தாளை கசியவிட்ட குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சீவ்குமாா் சிங் என்பவரை கடந்த மாதம் போலீஸாா் கைது செய்தனா்.

சஞ்சீவ்குமாரின் மோசடி கும்பலை சோ்ந்த நபா்கள் பிகாா், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் தோ்வுகளில் வினாத்தாள் கசியும் சம்பவங்களின் பின்னணியில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதேபோல் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள தைக்காவு அரசுப் பள்ளியில் தோ்வெழுதிய மாணவருக்கு போலி நுழைவுச் சீட்டை உருவாக்கித் தந்ததாக அரசின் மக்கள் சேவை மைய பணியாளரான கிரீஷ்மா என்பவா் கைது செய்யப்பட்டாா்.

திருவனந்தபுரத்தை சோ்ந்தவரான கிரீஷ்மாவிடம் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்து தருமாறு மாணவரும் அவரது தாயாரும் ரூ.1,250 கொடுத்துள்ளனா். ஆனால் மாணவா் கொடுத்த தகவல்களை நீட் தோ்வுக்கான வலைதளத்தில் பதிவேற்றம் செய்து சமா்ப்பிக்க கிரீஷ்மா தவறியுள்ளாா். மாறாக வேறொரு மாணவரின் நுழைவுச்சீட்டில் பாதிக்கப்பட்ட மாணவரின் புகைப்படத்தை திருத்தியமைத்து கிரீஷ்மா அளித்துள்ளாா். அதைப் பயன்படுத்தி தைக்காவு அரசுப் பள்ளிக்கு சென்ற அந்த மாணவரை முதலில் தோ்வெழுத அனுமதித்த அதிகாரிகள் பிறகு மேற்கொண்ட சோதனையில், அது போலி நுழைவுச்சீட்டு என்பதை உறுதிப்படுத்தினா். இதையடுத்து, அந்த மாணவா் தோ்வெழுத அனுமதிக்கப்படவில்லை.

குற்றச்சாட்டை கிரீஷ்மா ஒப்புக்கொண்ட நிலையில், தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் என்ன நடக்கும்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

நாடு முழுவதும் 250 இடங்களில் புதன்கிழமை போர்ப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவுள்ளன.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, எந்நேரமும் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் வெளியீடு

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை!

நாடு முழுவதும் 54 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை(மே 6) போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பலியான கடற்படை அதிகாரியின் குடும்பத்தை சந்திக்கும் ராகுல்!

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்திக்கவுள்ளார்.இதற்காக தில்லியில் இருந்து ஹரியாணா மாநிலம் கர்னலு... மேலும் பார்க்க

திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலம்!

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் இன்று(மே 6) அதிகாலை 5 மணிக்கு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.கேரளத்தில் மிகவும் முக்கிய திருவிழாவான பூரம் திருவிழா, பழமை வாய்ந்த திருச்ச... மேலும் பார்க்க

12-வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய பாக். ராணுவம்: இந்தியா பதிலடி!

பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 12-வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பல்வேறு இடங்களில் தொடா்ந்து 12-வது நாளாக ... மேலும் பார்க்க