செய்திகள் :

நீதிபதிகள் சொத்து விவரம்: உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம்

post image

புது தில்லி: நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய உச்சநீதிமன்றம் 2025, ஏப்.1 அன்று முடிவுசெய்தது. அதன்படி ஏற்கெனவே சில நீதிபதிகளின் சொத்து விவரங்கள் பெறப்பட்டு அவை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பிற நீதிபதிகளிடம் இருந்தும் சொத்து விவரங்கள் பெறப்பட்டு விரைவில் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

மேலும், 2022, நவ.9 முதல் 2025, மே 5 வரை உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பான உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் ஒப்புதல்கள், நீதிபதிகளின் பெயா், நியமன தேதி, சிறப்பு பிரிவு (எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி) உள்ளிட்ட தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும்படி வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.

போர்ப் பாதுகாப்பு ஒத்திகை: தொண்டர்களுக்கு பாஜக அழைப்பு!

நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் கலந்துகொள்ள கட்சியின் தலைவர்கள், தொண்டர்களுக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவ... மேலும் பார்க்க

காஷ்மீர் பயணத்தை மோடி ரத்து செய்தது ஏன்? கார்கே

காஷ்மீர் பயணத்தை மோடி ரத்து செய்தது ஏன்? என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். தாக்குதல் எச்சரிக்கை பற்றி முன்பே அறிந்ததால் பிரதமர் காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார். உளவுத்துறை ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை: மத்திய அரசு

புது தில்லி; நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் 7 நாள்களுக... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: கடற்படை அதிகாரியின் குடும்பத்தினருடன் ராகுல் சந்திப்பு!

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் வினஸ் நர்வாலின் குடும்பத்தினரைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.நர்வாலின் குடும்பத்தினரை சந்திக்க மக்களவை எத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் நக்சல் ஒருவர் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சத்தீஸ்கர்-தெலங்கானா எல்... மேலும் பார்க்க

போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் என்ன நடக்கும்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

நாடு முழுவதும் 250 இடங்களில் புதன்கிழமை போர்ப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவுள்ளன.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, எந்நேரமும் பாகிஸ்தான்... மேலும் பார்க்க