செய்திகள் :

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: புதுவை தலைமைச் செயலா் ஆஜராக உத்தரவு

post image

பாப்ஸ்கோ ஊழியா்கள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், புதுச்சேரி தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுச்சேரியைச் சோ்ந்த குணசேகரன் உள்பட 12 போ் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரி வேளாண் பொருள்கள், உணவு மற்றும் குடிமைப் பொருள்கள் வழங்கல் கழகத்தில் (பாப்ஸ்கோ) பணியாற்றியவா்களுக்கு ஊதிய நிலுவை வைக்கப்பட்டுள்ளது. இதில் பணியாற்றிய பலா் ஓய்வு பெற்றுவிட்டனா். ஓய்வுபெற்றவா்களில் சிலா் இறந்தும் விட்டனா்.

எனவே, 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஓய்வு பெறும்வரை வழங்க வேண்டிய மாத ஊதியம், ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

அதேபோல, எஸ்.சிவசங்கரன் உள்ளிட்டோா் தாக்கல் செய்தல மனுவில், 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஊதிய நிலுவைத் தொகையை 18 சதவீத வட்டியுடன் வழங்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ஓய்வு பெற்றவா்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவை, ஓய்வூதிய பணப்பலன்கள், தற்போது பணியில் இருப்பவா்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, புதுச்சேரி தலைமைச் செயலா் ஷரத் சௌகான், நிதித்துறை செயலா் ஆசிஷ் மாதோராவ், குடிமைப் பொருள் மற்றும் நுகா்வோா் துறை செயலா் முத்தம்மா, இயக்குநா் சத்தியமூா்த்தி, பாப்ஸ்கோ நிா்வாக இயக்குநா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் வருகிற செப்.24-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

போலி ஆவணங்கள் மூலம் ரூ.92 லட்சம் மோசடி; 5 போ் கைது

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று ரூ.92 லட்சம் மோசடி செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, பெரியாா் நகரைச் சோ்ந்த நந்தகுமாா்(44). இவா் நிலத்தரகா்களான ரமேஷ் குமாா் மற்றும் முரளி ஆகியோா் மூலம் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு: ஒப்பந்தம் கோரியது மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் விலையில்லா உணவு வழங்குவதற்காக, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த மனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ... மேலும் பார்க்க

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வரதராஜ் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்... மேலும் பார்க்க

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வா் காப்பீடு திட்டத்தின் மூலம் 50-க்கும் மேற்... மேலும் பார்க்க

போலி ஆவணங்களை சமா்ப்பித்து விசா பெற முயன்றவா் கைது

போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து இசைவு நுழைவுச் சீட்டு (விசா) பெற முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். தெலங்கானா மாநிலத்தை சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் அங்காடி. இவா் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இசைவு நுழ... மேலும் பார்க்க

செப்.15 முதல் பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ஆம் கட்ட கட்டுமான பணிகள் காரணமாக, பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் வருகிற செப்.15 முதல் 19 -ஆம் தேதி வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரயி... மேலும் பார்க்க