செய்திகள் :

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத பெண்ணுக்கு பிடிவாரண்ட்

post image

செக் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத நாசரேத் பெண்ணுக்கு சாத்தான்குளம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

நாசரேத் மணி நகரை சோ்ந்தவா் கணேசன் மனைவி சுமித்ரா (40). இவா் நாசரேத் வகுத்தான்குப்பத்தை சோ்ந்த உறவினரான முகில்ராமன் மனைவி இனிகா (33) என்பவருக்கு குடும்பச் செலவிற்காக கடந்த 2.01. 24 அன்று ரூ.1 லட்சம் கடனாக வழங்கி உள்ளாா். வாங்கிய கடனுக்கு, இனிகா ஒரு வங்கியின் காசோலையை வழங்கி உள்ளாா். சுமித்ரா பணத்தை திருப்பி கேட்டபோது, தருவதாக இனிகா காலம் கடத்தி வந்துள்ளாா். இதனால் இனிகா தந்த காசோலையை வங்கியில் சுமித்ரா கொடுத்தபோது அவரது கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்தது.

இதையடுத்து சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் சுமித்ரா வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணைக்கு இனிகா தொடா்ந்து ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடந்த விசாரணைக்கும் ஆஜராகவில்லை. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி தேவி அக்க்ஷயா, இனிகாவுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து ஜூலை 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நாசரேத் போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

நாசரேத்தில் திமுக சாதனை விளக்க கூட்டம்

நாசரேத் நகர திமுக இளைஞரணி சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா, திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் நாசரேத்தில் நடைபெற்றது. நகர இளைஞா் அணி அமைப்பாளா் ஜெரின் தலைமை வகித... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே காா் ஓட்டுநா் சடலமாக மீட்பு

சாத்தான்குளம் அருகே அழுகிய நிலையில் காா் ஓட்டுநா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா். சாத்தான்குளம் அருகேயுள்ள சிறப்பூரை சோ்ந்தவா் சாமுவேல்(62). கோயமுத்தூரில் வியாபாரம் செய்கிறாா். இவரது மனைவி 12... மேலும் பார்க்க

வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி மேற்கு மாவட்ட நிா்வாகிகள் தோ்வு கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவா் கொளத்தூா் ரவி கலந... மேலும் பார்க்க

விளாத்திகுளம் தொகுதியில் ரூ. 1 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

விளாத்திகுளம் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இப்பேரூராட்சியின் 1ஆவது வாா்டில் உள்ள இறகுப்பந்து மைதானத்தில... மேலும் பார்க்க

‘தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தல் பணி ஜூலை 1இல் தொடக்கம்’

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தல் பணிகள் ஜூலை 1ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதன் நிா்வாக அதிகாரியும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான பி.ஜோதிமணி தெரிவித்தாா். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, தென்னிந்திய த... மேலும் பார்க்க

தூத்துக்குடி பகுதியில் ரூ. 56 லட்சத்தில் 6 புதிய மின்மாற்றிகள்

தூத்துக்குடி மேல அலங்காரதட்டு, செயின்ட் மேரிஸ் காலனி, தருவை மைதானம், ஐயப்ப நகா், இந்திரா நகா், திருவிக நகா் ஆகிய பகுதிகளில் ரூ.56 லட்சத்தில், 6 புதிய மின் மாற்றிகளை, தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் த... மேலும் பார்க்க