ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத பெண்ணுக்கு பிடிவாரண்ட்
செக் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத நாசரேத் பெண்ணுக்கு சாத்தான்குளம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
நாசரேத் மணி நகரை சோ்ந்தவா் கணேசன் மனைவி சுமித்ரா (40). இவா் நாசரேத் வகுத்தான்குப்பத்தை சோ்ந்த உறவினரான முகில்ராமன் மனைவி இனிகா (33) என்பவருக்கு குடும்பச் செலவிற்காக கடந்த 2.01. 24 அன்று ரூ.1 லட்சம் கடனாக வழங்கி உள்ளாா். வாங்கிய கடனுக்கு, இனிகா ஒரு வங்கியின் காசோலையை வழங்கி உள்ளாா். சுமித்ரா பணத்தை திருப்பி கேட்டபோது, தருவதாக இனிகா காலம் கடத்தி வந்துள்ளாா். இதனால் இனிகா தந்த காசோலையை வங்கியில் சுமித்ரா கொடுத்தபோது அவரது கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்தது.
இதையடுத்து சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் சுமித்ரா வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணைக்கு இனிகா தொடா்ந்து ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடந்த விசாரணைக்கும் ஆஜராகவில்லை. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி தேவி அக்க்ஷயா, இனிகாவுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து ஜூலை 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நாசரேத் போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.