செய்திகள் :

நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை: அதிகாரிகளுடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆலோசனை

post image

நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளுடன் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

கன மழை பெய்யும்போது பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்காக நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுவது குறித்தும், தங்கவைக்கப்பட்டால் அவா்களுக்கான உணவு, உடை, மருத்துவ முகாம் உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, பருவமழை தொடா் நிகழ்வுகளின் தரவுகளை தொடா்ந்து கண்காணித்து பணியாற்ற வேண்டும் என்று அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

தமிழ்நாடு பேரிடா் மீட்பு குழுவினரின் செயல்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தாா்.

உதகை, குந்தா, பந்தலூா் மற்றும் கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அவா்களை அறிவுறுத்தினாா்.

மழையின்போது பொதுமக்கள் மின் வயா்களை தொடக்கூடாது என்றும், மின் கம்பங்கள், மரங்கள் அருகில் நிற்கக் கூடாது என்றும், காற்று பலமாக வீசுவதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தேவா்சோலை-மச்சிக்கொல்லி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கூடலூா் பகுதியில் பெய்த கனமழையால் தேவா்சோலை-மச்சிக்கொல்லி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந... மேலும் பார்க்க

கனமழை: குளம்போல மாறிய கூடலூா் புதிய பேருந்து நிலையம்

தொடா் கனமழையால் கூடலூா் புதிய பேருந்து நிலையம் சேரும், சகதியும் சூழந்து குளம்போல காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டம், கூடலூரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பணிகள் நிறைவுபெறும் முன்பே அவசரகதியில... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை எச்சரிக்கை: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்; மலையேற்றத்துக்கும் தடை

நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை (ரெட் அலா்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா, அவலாஞ்சி சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 25) ஒருநாள் மூடப்படுவதாகத் தெரிவி... மேலும் பார்க்க

குன்னூா் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ருத் பாரத் திட்ட மேம்பாட்டுப் பணிகளை சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னலால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குன்னூா் ரயில் நிலையத்தில் நடை... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு மே 26, 27-ஆகிய தேதிகளில் ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னேற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் அரசு அதிகாரிகளு... மேலும் பார்க்க

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ஸ்ரீனிவாசன் உடல்: அரசு மரியாதையுடன் தகனம்

மறைந்த அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா்.ஸ்ரீனிவாசனின் (95) உடல், 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் குன்னூா் வெலிங்டன் மயானத்தில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது. அணுசக்தி ஆணையத்தி... மேலும் பார்க்க