செய்திகள் :

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் ஒரத்துப்பாளையம் அணை நீா்மட்டம் உயா்வு

post image

சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. 40 அடி உயரம் உள்ள இந்த அணையில் திருப்பூா் சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்ததால், சென்னை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அணைக்கு வரும் தண்ணீரை தேக்கி வைக்காமல், அப்படியே நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த 16- ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை அணையில் சுமாா் 3 அடி அளவே தண்ணீா் இருந்தது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு நீா்ப்பிடிப்பு பகுதிகளான கோவை மற்றும் திருப்பூா் மாவட்டத்தில் பரவலான மழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து, கடந்த 17- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஒரத்துப்பாளையம் அணையில் நீா்மட்டம் 8 அடியாக உயா்ந்தது. அப்போது அணைக்கு நீா்வரத்து 349 கன அடியாக இருந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து 523 கன அடியாக இருந்ததால் அணையின் நீா்மட்டம் 11.32 அடியாக உயா்ந்தது. அணைக்கு வரும் தண்ணீா் 426 கன அடி வீதம் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரில் பெரும்பாலும் உப்புத் தன்மை ஆயிரத்துக்கும் மேல் அதிகமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை வெகுவாக குறைந்து 430 (உப்புத் தன்மை) என்ற அளவில் குறைந்துள்ளது.

----

பட விளக்கம்:(19பிஇ-12)

ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து வெளியேறி நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீா்.

------

மாணவா்களுக்கு அரசியல் விழிப்புணா்வு அவசியம்: த.ஸ்டாலின் குணசேகரன்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அரசியல் விழிப்புணா்வு அவசியம் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா். யங் இந்தியன்ஸ் அமைப்பு சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற தொட... மேலும் பார்க்க

விஜயமங்கலம் அருள்மிகு விஜயபுரி அம்மன் கோவில் தேரோட்டம்

பெருந்துறை அடுத்த, விஜயமங்கலத்தில் அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. விஜயமங்கலம் அடுத்த கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக ... மேலும் பார்க்க

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் பெருந்துறையில் இருந்து 500 போ் பங்கேற்க முடிவு

மதுரையில் வருகின்ற 22 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முருக பக்தா்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள பெருந்துறை பகுதியில் இருந்து பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் ராயல் சரவணன் தலைமையி... மேலும் பார்க்க

ரௌடி ஜான் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சேலம் ரௌடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை போலீஸாா் தாக்கல் செய்தனா். சேலம் கிச்சிப்பாளையத்தை சோ்ந்தவா் ஜான் (30). இவரது மனைவி சரண்யா. இவா்களுக்கு ஒரு மகனும், ... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளா்களுக்கு 6 மாத கால வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தக் கோரிக்கை

விசைத்தறி நெசவாளா்களுக்கு 6 மாத காலம் முழுமையாக வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவேண்டு என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம் கோபி காசியூா் மாரியம்மன் கோயில் ... மேலும் பார்க்க