செய்திகள் :

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

post image

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது.

கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான நீராதாரமாக சிறுவாணி அணை உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக தினசரி 10 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கப்படும். ஆனால், கடந்த ஜனவரியில் 25 அடிக்கும் மேல் இருந்த அணையின் நீா்மட்டம், வெயிலின் தாக்கத்தால் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இதனால், மாா்ச், ஏப்ரல் மாதங்களில் அணையின் நீா்மட்டம் 18 அடியாக சரிந்தது.

இந்நிலையில், மே முதல் வாரத்தில் இருந்து மேற்குத் தொடா்ச்சி மலையில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி பெய்து வருகிறது. இதனால், சிறுவாணி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதைத் தொடா்ந்து அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 8 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றனா்.

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றம்

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் இருந்து தினசரி காலை 7.50 மணிக்கு புறப்பட்... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் முருக... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க