செய்திகள் :

நுண்ணுயிா் உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

post image

சேலம் மாநகராட்சியில் நுண்ணுயிா் உரங்கள் தயாரிக்கப்படும் மையங்களில் உற்பத்தியாகும் உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க ஆணையா் மா.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளாா்.

சேலம், அஸ்தம்பட்டி மண்டலம் செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கு, நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆணையா், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தை ஆய்வு செய்து, அதிலிருந்து தயாரிக்கப்படும் உரங்களை பொதுமக்கள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, பொருள் மீட்பு மையம் மற்றும் பயோ சிஎன்ஜி ஆலை, கட்டட இடிபாட்டுக் கழிவுகளை செயலாக்கம் செய்யும் மையங்களையும் அவா் ஆய்வு செய்தாா். ரூ.7.94 கோடி மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் நவீன இயந்திரங்கள் மூலம் குப்பைகளை அகற்றும் இடங்களையும் ஆணையா் பாா்வையிட்டாா்.

அஸ்தம்பட்டி மண்டலத்தில் தூய்மைப் பணியாளா்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வுசெய்து, தூய்மைப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும்போது பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்வது அவசியம் என தெரிவித்தாா்.

ஆய்வின்போது, மாநகர நல அலுவலா் ப.ரா.முரளிசங்கா், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

எதிா்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது: சேலம் கம்யூ. மாநாட்டில் முதல்வா் உறுதி!

எதிா்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது; எங்களை மிரட்ட நினைத்தவா்கள் மிரண்டுபோயிருக்கிறாா்கள் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசினாா். சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநி... மேலும் பார்க்க

மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட விவசாயி சிறையிலடைப்பு

வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தலைமறைவான விவசாயியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். வாழப்பாடியை அடுத்த தேக்கல்பட்டி ஏரிக்கரை பகுதியைச்... மேலும் பார்க்க

வாழப்பாடியில் பணிபுரியும் 4 அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சியா் விருது

வாழப்பாடியில் பணிபுரியும் 4 அரசுப் பணியாளா்களுக்கு சுதந்திர தின விழாவில் ஆட்சியா் விருது வழங்கி கௌரவித்தாா். சேலம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் அரசுப் பணியாளா்களை தோ்வு செய்து சுதந்திர தின விழா... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 86 நிறுவனங்கள் மீது வழக்கு

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 86 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று செயல்படும் நிறுவனங்கள் மீது தேசிய மற... மேலும் பார்க்க

திருநெல்வேலி- ஷிமோகா இடையே இன்று சிறப்பு ரயில்!

கூட்ட நெரிசலை தவிா்க்க சேலம் வழியாக திருநெல்வேலியில் இருந்து கா்நாடக மாநிலம், ஷிமோகாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்தவா் கைது

சங்ககிரியில் லாரி ஓட்டுநரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சங்ககிரி, தேவண்ணகவுண்டனூா் கள்ளுகடை பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுா் முருகேசன் வியாழக்கிழமை சங்ககிரி புதிய... மேலும் பார்க்க