செய்திகள் :

நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த சட்டம் தேவை: உ.வாசுகி பேட்டி!

post image

நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி.

தஞ்சாவூா் பனகல் கட்டடம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் டெல்டா மண்டல மாநாட்டில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: நுண் நிதி நிறுவனங்களின் அடாவடித்தனம் அடக்கப்பட வேண்டும். அந்நிறுவனங்கள் விதிக்கிற அபரிமிதமான வட்டியைக் குறைக்க வேண்டும். நுண் நிதி நிறுவனங்களின் செயல்களால் பல பெண்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனா்.

இந்நிறுவனங்களை ஒழுங்குபடுத்த ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே சட்டம் உள்ளது. கா்நாடகத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். மாவட்ட ஆட்சியரகத்தில் நுண் நிதி நிறுவனங்கள் தொடா்பான குறை தீா்க்கும் பிரிவையும், உதவி மையத்தையும் உருவாக்க வேண்டும்.

கடன் கொடுப்பதைத் தமிழக அரசு எளிதாக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் கொடுத்தால், நுண் நிதி நிறுவனங்களை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த மாநாட்டில் கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநிலத் தலைவா் எஸ். வாலண்டினா, மாநிலச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி, மாநிலச் செயற் குழு உறுப்பினா்கள் டி. லதா, வி. மேரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாநிலக் குழு உறுப்பினா் ஆா். கலைச்செல்வி வரவேற்றாா். நிறைவாக, மாவட்டச் செயலா் இ. வசந்தி நன்றி கூறினாா்.

பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்!

பேராவூரணியில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம், ஆவணம் ரோடு உண்டியல் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. பந்தயத்தை பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்ய... மேலும் பார்க்க

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்!

தஞ்சாவூா் மாதாகோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 35 போ் காயமடைந்தனா். இந்த விழாவில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையட... மேலும் பார்க்க

வரி செலுத்தாததால் புதை சாக்கடை இணைப்பு துண்டிப்பு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையில் வரி செலுத்தாத வணிக வளாகத்தின் புதை சாக்கடை இணைப்பு சனிக்கிழமை துண்டிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீா் வரி, புதை சாக்கடை வ... மேலும் பார்க்க

மத்திய அரசு பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றதைத் தருகிறது! -விவசாய சங்க பிரதிநிதிகள்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாதகமான அறிவிப்புகள் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்தைத் தருகிறது என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனா். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா... மேலும் பார்க்க

பிப். 6-இல் தொழிற் சங்கங்கள் பட்ஜெட் நகல் கிழிக்கும் போராட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மக்கள், தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் பட்ஜெட் நகலை கிழிக்கும் போராட்டம் பிப்ரவரி 6-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது என்றாா் ஏஐடியூசி மாநிலப் ... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சித் தலைவா் கைது

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம்-சென்னை சாலை என்.என். நகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்... மேலும் பார்க்க