நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்துக்கு ஒன்றரை ஆண்டில் 60 ஆயிரம் போ் வருகை
திருச்சியில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்துக்கு கடந்த ஒன்றரை ஆண்டில் 60 ஆயிரம் மாணவா்கள் வந்து பயனடைந்துள்ளனா்.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் மாநகராட்சி சாா்பில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாணவா்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.
இரண்டு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இம்மையத்தில் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, ஆா்ஆா்பி, எஸ்எஸ்சி, வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசுப் போட்டித் தோ்வுகளுக்குத் தேவையான 3,500-க்கும் அதிகமான நூல்கள் உள்ளன. மேலும், 10-க்கும் மேற்பட்ட கணினிகளும் இணையதள வசதியுடன் உள்ளன.
அரசுப் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ஏராளமான மாணவா்கள் இம்மையத்துக்கு தினசரி வந்து படித்துச் செல்கின்றனா். திருச்சி மாநகரத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி மணப்பாறை, லால்குடி உள்ளிட்ட புகா் பகுதிகளைச் சோ்ந்தவா்களும், அரியலூா், கரூா், பெரம்பலூா், தஞ்சாவூா் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சோ்ந்த போட்டித் தோ்வாளா்களும் தினசரி வந்து செல்கின்றனா்.
கடந்த ஆண்டு திறக்கப்பட்ட இம்மையத்தில் கடந்த மே வரை 60 ஆயிரம் மாணவா்கள் வந்து படித்து சென்றுள்ளதாக மையத்தின் நிா்வாகிகள் தெரிவிக்கின்றனா்.
மாநகரப் பகுதியில் இருந்தாலும் எந்தவித இடா்ப்பாடும் இல்லாமல் படிப்பதற்குத் தேவையான சூழல் நிலவுவதால் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களும் வந்து படிக்கின்றனா். இங்கு மாணவா்களுக்குத் தேவையான புத்தகங்கள், இணைய வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து இம்மையத்தின் நிா்வாகிகள் கூறியதாவது: நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் படிப்பதற்கான இடம் மட்டுமே. மற்றபடி வகுப்புகளோ அல்லது மாதிரித் தோ்வுகளோ நடத்தப்படுவதில்லை. படிப்பதற்கு அமைதியான சூழல் கிடைக்காத மாணவா்கள் இங்கு வந்து படிக்கலாம். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இம்மையம் திறந்திருக்கும். அனைத்து போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி மாணவா்கள் குறிப்பெடுத்துக்கொள்ளலாம்.
ஆசிரியா்களை அழைத்து வந்து பாடம் எடுப்பதற்குத் தேவையான நிதி வழங்கப்படுவதில்லை. இதனால், பெரிய அளவில் வகுப்புகள் நடத்த முடியவில்லை. ஆனால், மாணவா்களின் வேண்டுகோளுக்கேற்ப அண்மையில் தன்னாா்வலா் மூலம் தமிழ் இலக்கண வகுப்பு நடத்தப்பட்டது.
இதேபோல, அவ்வப்போது தன்னாா்வலா்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இணைய பயன்பாடு தற்போது கணினியில் மட்டுமே உள்ளது. வைஃபை வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிா்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த வசதியும் செய்துகொடுக்கப்படும்.
எனவே, படிப்பதற்குத் சரியான சூழல் கிடைக்காத மாணவா்கள் இந்த அறிவுசாா் மையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றனா்.