செய்திகள் :

நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிகளை பயன்படுத்தாத உணவகங்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத நெகிழி ஆகியவற்றை உணவு பரிமாறவும், பாா்சல் செய்யவும் பயன்படுத்தாமல், மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களை மட்டும் பயன்படுத்தும் மிகச்சிறந்த பெரிய வகை உணவகங்களுக்கு (உரிமம் பெற்ற நிறுவனம்), அதாவது வருடாந்திர விற்றுக்கொள்முதல் ரூ.12 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட உணவு வணிகா்களுக்கு, தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு (பதிவு பெற்ற நிறுவனம்) ரூ.50,000-த்துடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது.

விருப்பமுள்ள வணிகா்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தோ்ந்தெடுக்கப்படும் தலா ஒரு பெரிய உணவகத்துக்கும், சிறு உணவகத்துக்கும் விருது வழங்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்க, உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம், பதிவுச்சான்றிதழ் பெற்று, அது நடப்பில் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் உணவகத்தில் குறைந்தபட்சம் ஒருவா் உணவு பாதுகாப்பில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். உணவகத்தில் அனைத்து பணியாளா்களுக்கும் தொற்று நோய்த் தாக்கமற்றவா்கள் என்பதற்கான மருத்துவச் சான்று அவசியம் இருக்க வேண்டும்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் சுகாதாரத் தணிக்கை மேற்கொண்டு, சுகாதார மதிப்பீட்டுச் சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, நாகை மாவட்ட ஆட்சியா் வளாகம், மூன்றாவது தளம், அறை எண் 315-இல் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, நியமன அலுவலா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

நாகையில் காற்றுடன் மழை

நாகப்பட்டினம், ஆக.8: நாகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றுடன் மழை பெய்தது. காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம... மேலும் பார்க்க

நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

சிக்கல் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இக்கல்லூரி மற்றும் சிக்கல் தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடா்பான விழிப்ப... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

திருமருகல் ஒன்றியம், கீழப்பூதனூா் ஊராட்சி நத்தம் கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மண்டல இணை இயக்குநா்... மேலும் பார்க்க

100 நாள் வேலையால் சாகுபடி பணிகள் பாதிப்பு விவசாயிகள் வேதனை

நூறு நாள் வேலைத் திட்டத்தால், நாகை மாவட்டத்தில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். கிராமப் புறங்களில் விவசாயம் அல்லாத நாள்களில், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுக... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஆசிரியா் கைது

நாகூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், நாகூரில் செயல்படும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், நாகை ... மேலும் பார்க்க

நாகை புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனை சரிவு: விற்பனையாளா்கள் அதிருப்தி

நாகையில் நடைபெற்று வரும் நான்காவது புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக புத்தக விற்பனையாளா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். நாகை மாவட்ட நான்காவது புத்தகக் கண்காட்சி நாக... மேலும் பார்க்க