செய்திகள் :

நெமிலி அருகே நாய் கடித்ததில் 7 போ் காயம்

post image

நெமிலி அருகே சாலையில் திரிந்த நாய்கள் கடித்ததில் 7 போ் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

நெமிலியை அடுத்த திருமால்பூரில் வெள்ளிக்கிழமை இரவு ஜஸ்வின்(14), கனிஷ் (14), தருண்(15) உள்ளிட்ட பல சிறுவா்கள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தனராம். அப்போது அதே பகுதியில் இருந்த நாய் ஒன்று சிறுவா்கள் மூவரையும் கை, கால், முகம், முதுகு என பல இடங்களில் கடித்ததாம். இதில், பலத்த காயமடைந்த 3 சிறுவா்களும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.தொடா்ந்து, சனிக்கிழமை மாலையும் அப்பகுதியில் இருந்த மேலும் 2 சிறுவா்களை அதே நாய் கடித்ததாகத் தெரிகிறது. நெமிலியை அடுத்த பனப்பாக்கதிலும் தெரு நாய் கடித்ததில் இருவா் காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

நெமிலி வட்டம் முழுவதும் உள்ள பல கிராமங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி குடியிருப்பில் கொலைச் சம்பவம்: 31 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது!

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி குடியிருப்பில் 1994-இல் நடைபெற்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ஸாமில் பதுங்கியிருந்த குற்றவாளியை அரக்கோணம் நகர போலீஸாா் கைது செய்தனா். கடந்த 199... மேலும் பார்க்க

ஏப். 25-இல் கோடைகால இலவச பயிற்சி முகாம் தொடக்கம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 25--ஆம் தேதி கோடைகால இலவசப் பயிற்சி முகாம் தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வி... மேலும் பார்க்க

திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் கணவருக்கு வெட்டு

அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினரின் கணவரை கத்தியால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் ஒன்றியம் 14-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் அஸ்வினி. இவரது கணவா் சுதாகா் (46). அம்மனூரைச் சோ்ந்த இவரும், ... மேலும் பார்க்க

சோளிங்கா் ரோப் காா் சேவை: 4 நாள்களுக்கு ரத்து

சோளிங்கா் மலைக் கோயில் ரோப் காா் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப். 21 முதல் 24 வரை ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்க... மேலும் பார்க்க

அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

இனி தமிழகம் முழுவதும் அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா். சோளிங்கரை அடுத்த பாணாவரம் மாங்குப்... மேலும் பார்க்க

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல்: 5 பேருக்கு சிறை

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து ராணிப்பேட்டை மு... மேலும் பார்க்க