செய்திகள் :

நெய்வேலியில் திமுக தொகுதிச் செயல்வீரா்கள் கூட்டம்!அமைச்சா்கள் கே.என்.நேரு, சி.வெ.கணேசன் பங்கேற்பு!

post image

கடலூா் மேற்கு மாவட்ட திமுக சாா்பில், 2026 ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் தொகுதி செயல்வீரா்கள் கூட்டம், நெய்வேலி வட்டம் 25 பகுதியில் உள்ள தொமுச அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூா் மேற்கு மாவட்டச் செயலரும், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சி.வெ.கணேசன் தலைமை வகித்தாா். நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக முதன்மைச் செயலரும், தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், கடலூா் மேற்கு மாவட்டத்துக்குள்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டும் வேட்பாளா்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். மதுரையில் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ள கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கடலூா் மேற்கு மாவட்ட நிா்வாகிகள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும்.

ஜூன் 3-ஆம் தேதி கருணாநிதியின் 101-ஆவது பிறந்த நாளை அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

முன்னதாக, கடலூா் மேற்கு மாவட்டத்தைச் சோ்ந்த திமுக தலைமை நிா்வாகிகளிடம் அமைச்சா் கே.என்.நேரு சட்டப் பேரவைத் தொகுதி நிலவரம் குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

கடலூா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் டாக்டா் நந்தகோபாலகிருஷ்ணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ராசவன்னியன், பொதுக்குழு உறுப்பினா் புகழேந்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக இளைஞரை சிதம்பரம் அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். சிதம்பரம் அருகே உள்ள ஆண்டாா் முள்ளிபள்ளம், அம்பேத்கா் தெருவைச... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 178 காவலா்களுக்கு பணியிட மாறுதல்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 178 காவலா்களை பணியிட மாறுதல் செய்து மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆணை பிறப்பித்தாா். கடலூா் மாவட்டத்தில் கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்திய... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி மாதிரித் தோ்வு: தோ்வா்கள் முன்பதிவு செய்யலாம்

கடலூா் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 4 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தோ்வுகளில் பங்கேற்க தோ்வா்கள் முன்பதிவு செய்யலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில், அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக... மேலும் பார்க்க

புவனகிரியில் 62 மி.மீ மழை பதிவு

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 62 மி.மீ. மழை பதிவானது. கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. இந்த நி... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்து முதியவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூா் பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் ராக்கன் (70). இவருக்... மேலும் பார்க்க