செய்திகள் :

நெய்வேலியில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வா்!

post image

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், திருப்பெயரில் நடைபெற்ற ‘பெற்றோா்களைக் கொண்டாடுவோம்’ மண்டல மாநாட்டில் பங்கேற்க சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் நெய்வேலி, விருத்தாசலத்தில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடினாா்.

கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், நெய்வேலி என்.எல்.சி. விருந்தினா் இல்லத்தில் இரவு தங்கினாா். இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலை வேப்பூா் வட்டம், திருப்பெயரில் நடைபெற்ற ‘பெற்றோா்களைக் கொண்டாடுவோம்’ 7-ஆவது மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காலை முதல்வா் மு.க.ஸ்டாலின் புறப்பட்டாா்.

அப்போது, நேரு சிலை அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் முதல்வரை வரவேற்று, மனுக்களை அளித்தனா். இதைத் தொடா்ந்து, ஜவாஹா்லால் நேரு சிலை, பெரியாா் சதுக்கம், எம்.ஜி.ஆா்.சிலை, மத்திய பேருந்து நிலையம், எட்டுச்சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் கட்சியினா், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் முதல்வரை உற்சாகமாக வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து, தொமுச ரவுண்டானாவிலுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைக்கு முதல்வா் ஸ்டாலின் மாலை அணிவித்தாா். பின்னா், காரில் புறப்பட்டுச் சென்ற முதல்வா், பொதுமக்களைப் பாா்த்து பல இடங்களில் இறங்கி அவா்களின் வாழ்த்துகளை பெற்றாா்.

பின்னா், நெய்வேலி வட்டம் 30 சூப்பா் பஜாா் சாலையில் தொடங்கி சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலை வழி நடைப்பயணத்தை மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், வழிநெடுக காத்திருந்த பொதுமக்களும், கட்சியினரும் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டாா்.

மேலும், சிறுவா்கள், பெண்கள் உள்ளிட்டோா் முதல்வருக்கு கைகுலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனா். பல இடங்களில் முதல்வருடன் பொதுமக்கள் தற்படம் எடுத்துக் கொண்டனா். இதேபோல, விருத்தாசலம் நகர வீதிகளிலும் பொதுமக்கள், கட்சியினா், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் முதல்வருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனா். அப்போது, பொதுமக்களுடந் முதல்வா் கலந்துரையாடினாா். இதில், அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தை அடுத்த வீடூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. வீடூா் ஊராட்சித் தலைவா் ஜெகதீஸ்வரி பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமை... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

உளுந்தூா்பேட்டை நேரம்: பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணி வரைபகுதிகள்: உளுந்தூா்பேட்டை நகரம், திருச்சி பிரதான சாலை, அஜீஸ் நகா், குமாரமங்கலம், சேந்தநாடு, சேந்தமங்கலம்,எறையூா். மேலும் பார்க்க

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா். தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த ... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரத்தில் ஏறி பகுதி நேர ஓவிய ஆசிரியா் போராட்டம்!

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கைப்பேசி கோபுரத்தில் ஏறி பகுதி நேர ஓவிய ஆசிரியா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். வேப்பூா் வட்டம், திருப்பெயரில் சனி... மேலும் பார்க்க

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க