செய்திகள் :

நெய், சோப்பு, தின்பண்டங்கள் விலை குறைகிறதா? ஜிஎஸ்டி குறைக்கப்பட்டால்..?!

post image

நெய், சோப்பு போன்ற அத்தியாவசிய பொருள்கள் மீதான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்றாட அத்தியாவசிய பொருள்கள் மீதுள்ள வரியைக் குறைத்து பொதுமக்களின் வரிச்சுமையைக் குறைக்கவும், அவற்றின் மீதான வரியை மறுபரிசீலனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மிகக் குறைந்த அளவிலான வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு நற்செய்தியாகவும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், அத்தியாவசிய பொருள்களின் சரக்கு மற்றும் சேவை வரியின் நிலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சில அத்தியாவசியப் பொருள்கள் 5 முதல் 12 சதவிகித நிலைகளில் வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒருவேளை இந்த அளவு மாற்றம் செய்யப்பட்டு விகிதம் குறைக்கப்படலாம், அல்லது முற்றிலுமாக நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதில், விகிதம் குறைக்கப்படுவதால் பொருள்கள் மலிவு விலையில் கிடைக்கும்.

ஜிஎஸ்டியின் 56-வது கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கருதப்படுகிறது. மேலும், அரசு மரபுமுறையின்படி கூட்டம் நடைபெறுவதற்கு 15 நாள்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட வேண்டும். இந்த மாத இறுதியில் இதன் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புகள் அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு சில மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெறும் பேரவைத் தேர்தல்களுக்கு முன்னதாக மக்களின் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர உதவும்.

மத்திய நிதியமைச்சர் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில், வரிவிகிதங்களின் மாற்றங்களைக் கொண்டுவர பரிந்துரைப்பார்கள்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், 2017 ஆம் ஆண்டு பொருள்கள் மீதான மறைமுக வரி விதிக்கப்பட்டதற்கு பின்னர், ஜிஎஸ்டி விகிதங்களில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

In what could bring major relief to middle- and lower-income households, the central government is seriously considering a restructuring of the Goods and Services Tax (GST) slabs

இதையும் படிக்க... 20 நிமிடங்களில் அதிவேக சார்ஜிங்..! டாடா ஹாரியர் இவி!

குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: கனரா வங்கியைத் தொடர்ந்து மற்றொரு வங்கி!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை; அதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.ப... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார் சத்யேந்தர் ஜெயின்!

தில்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்துவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில் விசாரணைக்காகத் தில்லி முன்னாள் அமைச்சரும், ஆத் ஆத்மி தலைவருமான சத்யேந்தர் ஜெயின் அமலாக்கத்... மேலும் பார்க்க

தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?

மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட பிகார் பெண், தனது கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது.பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத... மேலும் பார்க்க

டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பாலியல் வன்கொடுமை! செல்ஃபி எடுத்து மிரட்டல்!

புணேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்து, இதுகுறித்து யாரிடமாவத... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை தொடக்கம்: புறப்பட்டது 2வது குழு!

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே அமர்நாத் யாத்திரை கோலகலமாக இன்று(ஜூலை 3) முதல் தொடங்கியுள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோ... மேலும் பார்க்க

தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.என்ன நடந்தது... மேலும் பார்க்க