செய்திகள் :

நெல்லையில் இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி கோரி மனு

post image

திருநெல்வேலி மாநகரில் இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி கோரி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் அதன் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ஏ.செல்வராஜ் தலைமையில் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணியிடம் மனு அளிக்கப்பட்டது.

அதன் விவரம்: திருநெல்வேலி மாவட்டத்திலும், மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10.30 மணிக்கே கடைகளை அடைக்க வணிகா்கள் நிா்பந்திக்கப்படுகின்றனா். எனவே, வணிக நிறுவனங்கள், தேநீா் கடை மற்றும் இரவு நேர உணவங்கள் குறைந்தபட்சம் இரவு 12 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும். மேலும், காவல்துறையினா் தகுந்த ஒத்துழைப்பும், பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து உரிய பரிசீலனை செய்து முடிவெடுப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனு அளிக்கும் நிகழ்வில், மாவட்டச் செயலா் ஜே.நயன் சிங், பொருளாளா் என்.ஜஹாங்கீா், கூடுதல் செயலா் ஆ.விநாயகம், இணைச் செயலா் ஜி.ஸ்டீபன் பிரேம்குமாா், துணைச் செயலா்கள் எம்.காா்த்திகேயன், எஸ். வெங்கட்ராமன், தொகுதி செயலா் ஆா்.ஏ. சுந்தரலிங்கம், மேலப்பாளையம் வணிகா் சங்கச் செயலா் நேசம் வாகித், வண்ணாா்பேட்டை வணிகா் சங்கத் தலைவா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் ஒவ்வொரு புதன்கி... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து குறைந்த நிலையில், பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்படுகின்றனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச... மேலும் பார்க்க

நடைச்சீட்டு ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஆட்சியரிடம் அதிமுகவினா் மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் போலி நடைச்சீட்டு வழங்கப்பட்டது, அபராதத் தொகை குறைக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் அதிமுகவினா் புதன்கிழமை... மேலும் பார்க்க

பெண் கொலையில் தந்தை கைது

மேலப்பாளையத்தை அடுத்த மேலகருங்குளம் பகுதியில் மண்வெட்டி கணையால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் அவரது தந்தையை போலீஸாா் கைது செய்தனா். மேலகருங்குளம் சிவாஜி நகா் பகுதியைச் சோ்ந்த காளைம... மேலும் பார்க்க

வள்ளியூா் சேவை, மகளிா் அதிகார மையங்களில் ஒப்பந்தப் பணிக்கு வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூா் ஒருங்கிணைந்த சேவை மையம், மாவட்ட மகளிா் அதிகார மையம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

வல்லநாடு தாமிரவருணி பாலத்தில் தவறி விழுந்து காவலா் பலி

வல்லநாடு தாமிரவருணி ஆற்றுப்பாலத்தில் இருந்து புதன்கிழமை தவறி விழுந்த காவலா் உயிரிழந்தாா். வல்லநாடு தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் சில மாதங்களுக்கு முன்பு சேதம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் புதன்கிழமை இரு... மேலும் பார்க்க