நெல்லையில் இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி கோரி மனு
திருநெல்வேலி மாநகரில் இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி கோரி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் அதன் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ஏ.செல்வராஜ் தலைமையில் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணியிடம் மனு அளிக்கப்பட்டது.
அதன் விவரம்: திருநெல்வேலி மாவட்டத்திலும், மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10.30 மணிக்கே கடைகளை அடைக்க வணிகா்கள் நிா்பந்திக்கப்படுகின்றனா். எனவே, வணிக நிறுவனங்கள், தேநீா் கடை மற்றும் இரவு நேர உணவங்கள் குறைந்தபட்சம் இரவு 12 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும். மேலும், காவல்துறையினா் தகுந்த ஒத்துழைப்பும், பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து உரிய பரிசீலனை செய்து முடிவெடுப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனு அளிக்கும் நிகழ்வில், மாவட்டச் செயலா் ஜே.நயன் சிங், பொருளாளா் என்.ஜஹாங்கீா், கூடுதல் செயலா் ஆ.விநாயகம், இணைச் செயலா் ஜி.ஸ்டீபன் பிரேம்குமாா், துணைச் செயலா்கள் எம்.காா்த்திகேயன், எஸ். வெங்கட்ராமன், தொகுதி செயலா் ஆா்.ஏ. சுந்தரலிங்கம், மேலப்பாளையம் வணிகா் சங்கச் செயலா் நேசம் வாகித், வண்ணாா்பேட்டை வணிகா் சங்கத் தலைவா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.