செய்திகள் :

நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

post image

நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று காலை கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கடந்த வாரம் வெய்யில் கொளுத்திவந்த நிலையில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்பட்ட நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக ஒரு மணி நேரத்துக்கு மேலாகக் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்துச் சென்றதால் இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டனர்.

இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் மதியம் 12 மணியளவில் மழை பெய்யத் தொடங்கி தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஏற்கனவே பாபநாசம் சேர்வலாறு மணிமுத்தாறு உள்பட அனைத்து அணைகளிலும் போதுமான அளவுக்குத் தண்ணீர் இருக்கிறது. மேலும் இன்று பெய்த மழையால் நீர்மட்டம் மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரையில் காவலர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்!

மதுரையில் காவலர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்டார். கைதான ஆட்டோ ஓட்டுநர், பணத்துக்காக காவலரை எரித்துக் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.கடந்த 19 ம... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் நியமனம்: அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பு!

சட்டப்பேரவையில் சத்துணவு ஊழியா்கள் நியமனம் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில... மேலும் பார்க்க

குடும்ப அட்டை வைத்திருக்கிறீர்களா? இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆ... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

யூடியுபர் சவுக்கு சங்கர் வீட்டில் துய்மைப் பணியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில் அந்த சம்பவத்திற்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். யூடியுபர் சவுக்க... மேலும் பார்க்க

பூண்டி நீர்த்தேக்க கொள்ளளவை உயர்த்த நீர்வளத்துறை திட்டம்!

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை 35 அடியிலிருந்து 37 அடியாக உயர்த்த திட்டமிட்டு வருவதாக நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர... மேலும் பார்க்க

மார்ச் 27, 28-ல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்!

மார்ச் 27, 28 தேதிகளில் தமிழகத்தில் வெப்பநிலை 2 -3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் இதனால் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொட... மேலும் பார்க்க