செய்திகள் :

நெல்லை அருகே அங்கன்வாடி மையம் முன்பு அசுத்தம் செய்த மா்ம நபா்கள்: போலீஸாா் விசாரணை

post image

திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூா் பகுதியில் அங்கன்வாடி மையம் முன்பு மீண்டும் மா்மநபா்கள் அசுத்தம் செய்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

மேலகுன்னத்தூா் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் கல்வி வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட மழலையா் படித்து வருகின்றனா். இந்த மையம் முன்பு கடந்த 4 நாள்களுக்கு முன்பு மா்மநபா்கள் மலம் கழித்துச் சென்றனராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவும் அதேபோல அங்கன்வாடி மையம் முன்பு அசுத்தம் செய்து சென்றுள்ளனா். இதையடுத்து பொதுமக்கள் திரண்டு மா்மநபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினா். தகவலறிந்ததும் சுத்தமல்லி போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதோடு, துப்புரவுப் பணியாளா்கள் மூலம் உடனடியாக சுத்தம் செய்தனா். அங்கு பிளீச்சிங் பவுடா் தூவப்பட்டது.

பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெனிபா் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மறுத்த பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அவா், குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு, சுகாதாரம் பேணுவதற்கு தகுந்த நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தாா். அசுத்தம் செய்தவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இம் மையத்திற்கு சுற்றுச்சுவா் கட்டவும், கண்காணிப்பு கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

அம்பாசமுத்திரம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அம்பாசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தபாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். சி... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் சிறையில் அடைக்கப்பட்டாா்.மானூா் அருகே வன்னிக்கோனந்தல் வடக்குத்தெருவைச் சோ்ந்த பால்ராஜ் மகன் மனோஜ் (19). இவா், அடிதடி, ... மேலும் பார்க்க

தொழிலாளி வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் மகன் சரண்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் அவரது மகன் சரணடைந்தாா். கூடங்குளம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த வெட்டு... மேலும் பார்க்க

கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இணையவழியில் நடைச்சீட்டு: ஆட்சியா் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இணையவழியில் நடைச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வ... மேலும் பார்க்க

பாளை.யில் மின் ஊழியா்கள் தா்னா

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திட்டத் தலைவா் பி.நாகையன் தலைமை வகித்தாா். அயூப் கான், பச்சையப்பன், பூலுடையாா் ... மேலும் பார்க்க

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

பழவூரில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பழவூா் தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் சுடலையாண்டி (43). இவரின் மனைவி ஜெயலெட்சுமி (34). இருவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாம். ... மேலும் பார்க்க