செய்திகள் :

நெல்லை: `சாமக்கொடையில் மண்டையோடு, எலும்புடன் சாமி ஆட்டம்..' பரவிய வீடியோ - 5 பேர் மீது வழக்கு பதிவு

post image

நள்ளிரவில் நடக்கும் சாமக் கொடையின்போது மயானத்துக்குச் சென்று திரும்பிய சாமியாடிகள் மனித எலும்புகளை கையில் ஏந்தியபடி வந்து சாமியாடிய விவகாரம் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ளது உப்பூர். தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள அந்த கிராமத்தில் சுடலை மாடசாமி கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வழிபட வருவார்கள். சுடலை மாடசாமி கோயிலில் கடந்த 6-ம் தேதி இரவு கொடைவிழா நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூஜைகள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நிகழ்ச்சிகள் தொடங்கின. அதன் முக்கிய நிகழ்வாக சாமியாடிகள், மயான வேட்டைக்காக தீப்பந்தங்களை ஏந்தியபடி மயானத்துக்குச் சென்று திரும்புவது வழக்கம். அதன்படி, மயானத்துக்கு சாமியாடிகள் சென்றார்கள். அங்குள்ள சுடுகாட்டில், இறந்த ஒருவரது பிணம் எரிந்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அங்கு சென்ற சாமியாடிகள் பிணத்தின் மண்டையோடு, கை எலும்புகள் ஆகியவற்றை தூக்கி வந்தனர்.

கொடை விழாவில் சாமியாடிகள், மனித மண்டையோடு மற்றும் எலும்புகளுடன் கோயிலில் ஆக்ரோஷமான சாமியாடினார்கள். ஒரு கையில் மனித எலும்பு, மற்றொரு கையில் வீச்சரிவாள் ஏந்தியபடி, நாக்கைத் துருத்திக் கொண்டு சாமியாடிகள் ஆடியதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர். இந்த கொடைவிழா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக வீரவநல்லூர் போலீஸில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார், கொடை விழாவில் சாமியாடியவர்கள், கோயில் பூசாரி உள்பட 5 பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார்கள்.

ஏற்கெனவே 2021-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே இதேபோன்று மனித எலும்புகளை எடுத்து வந்த விவகாரம் சர்ச்சையானதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது நெல்லை மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "பொதுவாக சுடலை மாடசாமி கோயில்களில் சாமக் கொடைக்காக மயானம் செல்லும் சாமிகள், மனித உடலின் எச்சங்களைத் தோண்டியெடுத்து வருவது காலங்காலமாக நடக்கும் வழக்கம். அண்மைக் காலத்தில் மயானத்துக்கு சென்றுவிட்டு திரும்புவதை மட்டுமே செய்கிறார்கள். ஆனால் சில கிராமங்களில் மட்டும் இப்போதும் புதைக்கப்பட்ட உடல்களின் எலும்புகளைத் தோண்டி எடுத்து வருகிறார்கள். ஊர்காடு கோயிலில் எப்போதும் சாமியாடிகள் எலும்புகளை எடுத்து வந்து சாமியாடுவார்கள். இந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் அது தொடர்பான காட்சிகள் வெளியானதால் இந்த விவகாரம் தேவையில்லாமல் பெரிதாக ஆக்கப்பட்டு விட்டது" என்கிறார்கள்.

நாமக்கல் மூதாட்டி கொடூர கொலை... மர்ம நபர்களைப் பிடிக்க எட்டு தனிப்படைகள்; காவல்துறை என்ன சொல்கிறது?

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சித்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சாமியாத்தாள்(67). இவரது கணவர் இறந்து விட்டார். வீட்டின் அருகில் உள்ள சொந்தத் தோட்டத்தில் விவசாயம் செய்து தனியாக வசித்து வருகிறார்.ச... மேலும் பார்க்க

Meghalaya Husband Murder: "நகையுடன் வரச் சொன்னார்" - குடும்பத்தினர் சந்தேகம்; மனைவி கைதானது எப்படி?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவர் தனது மனைவியுடன் கடந்த மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றனர்.அவர்கள் சிரபுஞ்சிக்குச் சென்றபோது கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்ட... மேலும் பார்க்க

இளம்பெண் பாலியல் புகார்... புதுச்சேரிக்கு தப்பிஓடிய ஆம்பூர் அர்ச்சகர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (40). இவர் அங்குள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான ஒரு திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார். இந்த நிலையில், தியாகராஜன் மீது திருமணமாகாத 2... மேலும் பார்க்க

`உன்னை ராணிபோல பார்த்துக்கொள்கிறேன்’ - பெண் ஊழியரிடம் அத்துமீறினாரா சுகாதாரத்துறை அதிகாரி?

திருப்பத்தூர் மாவட்டம், மான்கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த பெண் (வயது 39). இவர், திருப்பத்தூரில் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலீஸ் அலட்சியம்? - அதிரடி உத்தரவிட்ட கோர்ட்... மும்பையில் கைதான நபர்!

சதுப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தலைமறைவாகி இருந்த தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த பாஜக முன்னாள் நிர்வாகி நீலகண்டனை மும்பையில் வைத்து ஆலங்குளம் போலீசார் கைது செய்து... மேலும் பார்க்க

சிறுவனை சிகரெட் பிடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது; 2 போலீஸார் சஸ்பெண்ட்.. நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், `102 ரெட்டியூர்’ கிராமத்தில், 9 வயது சிறுவன் சிகரெட் புகைப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. விசாரணையின்போது, அந்த வீடியோ கடந... மேலும் பார்க்க