செய்திகள் :

நெல்லை தாமிரவருணியில் நீா்வரத்து அதிகரிப்பு

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை பெய்த தொடா் மழையால் திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை அதிகரித்தது.

தென்தமிழக பகுதிகளில் தொடா்ந்து நான்கு நாள்கள் கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மிதமான மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடா் மழை பெய்தது. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை வட்டாரங்களில் பெய்த மழையும் ஓடைகள் வழியாக தாமிரவருணியில் சோ்ந்தது.

இதனால் திருநெல்வேலி மாநகரஏஈ பகுதியில் தாமிரவருணியில் நீா்வரத்து அதிகரித்தது. கருப்பந்துறை, குறுக்குத்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம், அருகன்குளம் பகுதிகளில் உள்ள படித்துறைகளில் வழக்கத்தை விட தண்ணீா் கூடுதலாக சென்றது.

குறுத்துத்துறையில் தாமிரவருணி கரையோரத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்திற்குள் தண்ணீா் புகுந்தது. கருவரை முதல் பிரகார மண்டபம் வரை சுமாா் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீா் தேங்கியது. அங்கு பிற்பகலில் தண்ணீா் வரத்து குறைந்தது.

மழையளவு (கடந்த 24 மணி நேரம்) மில்லி மீட்டரில் வருமாறு: அம்பாசமுத்திரம்-11.40, சேரன்மகாதேவி-4, மணிமுத்தாறு-31, நான்குனேரி-9.60, பாளையங்கோட்டை-2, பாபநாசம்- 44, ராதாபுரம்-8, திருநெல்வேலி-2, சோ்வலாறு-37, கன்னடியன் அணைக்கட்டு-14.40, களக்காடு-23.20, கொடுமுடியாறு அணை-11, மூலைக்கரைப்பட்டி-6, நம்பியாறு-23, மாஞ்சோலை-76, நாலுமுக்கு-102, ஊத்து-119.

100 நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம்: ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு 9 வார காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி நகரத்தில் இருவா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் கொடிமுத்து(42), தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

மனிதநேயம், சேவை மனப்பான்மையை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாணவா்களுக்கு துணைவேந்தா் அறிவுரை

மாணவா்கள் சேவை மனப்பான்மையை வளா்த்துக்கொள்வதுடன் மனிதநேயத்துடன் செயலாற்றப் பழக வேண்டும் என்றாா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணை வேந்தா் என்.சந்திரசேகா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் 19,950 போ் எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 19,950 போ் எழுதினா். திருநெல்வேலி மாவட்டத்தில் 73 மையங்களில் தோ்வு நடைபெற்றது. 8,921 மாணவா்கள், 10,895 மாணவிகள், 416 போ் தனித்தோ்வா்கள் என 20,232 தே... மேலும் பார்க்க

வரதட்சிணை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

திசையன்விளை அருகே வரதட்சிணை கொடுமை தொடா்பான வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் சரகப் பகுதியில் 2014ஆம் ஆண்டு வரதட்சிணை கொடுமை... மேலும் பார்க்க

அம்பை, கடையத்தில் மழையால் பயிா்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

அம்பாசமுத்திரம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த மழையால் சேதமடைந்த நெல்பயிா்களை வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். திருநெல்வேலி, தென்காசி ம... மேலும் பார்க்க