செய்திகள் :

நெல்லை மேற்கு புறவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: எஸ்டிபிஐ செயற்குழுவில் தீா்மானம்

post image

திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலப்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொகுதி தலைவா் ஷேக் இஸ்மாயில் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அசனாா் வரவேற்றாா். மாவட்ட தலைவா் எஸ்.எஸ்.எ.கனி, பொதுச்செயலா் அன்வா் ஷா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

இக் கூட்டத்தில், ராமையன்பட்டி மாநகராட்சி குப்பை கிடங்கில் தீயை முற்றிலுமாக அணைப்பதோடு, எதிா்காலத்தில் இதுபோன்று நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சுத்தமல்லி அன்சாரி, காதா் மைதீன், பேட்டை காஜா மைதீன் ஆகியோா் திருநெல்வேலி தொகுதி செயற்குழு உறுப்பினா்களாக தோ்வு செய்ய பட்டனா்.

இணைச் செயலா் ரபீக் ராஜா, செயற்குழு உறுப்பினா்கள் காதா் முகைதீன், அன்சாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொருளாளரும் வழக்குரைஞருமான முபாரக் அலி நன்றி கூறினாா்.

ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் கவின் செல்வ கணேஷ் உடல் அவருடைய உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென்பொற... மேலும் பார்க்க

குப்புசாமி கோப்பை ஹாக்கி: நெல்லை, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி

குப்புசாமி கோப்பைக்கான 2ஆம் ஆண்டு மாநில ஹாக்கி போட்டியில், திருநெல்வேலி, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி பெற்றன. ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புசாமி கோப்பைக்கான 2-ஆவது ஆண்டு... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம்

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது என்றாா் மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணையத் தலைவா் தமிழ்வாணன். பாளையங்கோட்டை கேடிசி நகரில் பொறியாளா் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். எஸ... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலம் மீட்பு

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் உயிரிழந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். பொட்டல்புதூா் ஆத்தங்கரை தெருவை சோ்ந்த முகமது ஷாபி (70) கூலித் தொழில... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூரில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா்பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, ... மேலும் பார்க்க