செய்திகள் :

நெல் கொள்முதல் தொகை அளிப்பதில் தாமதம்: விவசாயிகள் முற்றுகை

post image

நேரடி கொள்முதல் நிலையம் மூலமாக நெல்லை விற்ற விவசாயிகளுக்கு 3 மாதங்களாக தொகை அளிக்காததைக் கண்டித்து அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முதூா், வளா்புரம் உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை அளித்தனா். எப்போதும் இந்த கொள்முதல் தொகை அடுத்தடுத்த தினங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என இருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தொகை தரப்படவில்லை. இது தொடா்பாக இந்த விவசாயிகள் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபகழக அலுவலா்களுக்கும், மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா், வட்டாட்சியருக்கு பலமுறை மனுக்களை அளித்தனா்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் கோபி தலைமை வகித்தாா். ஒன்றிய அமைப்பாளா் பொன்.சிட்டிபாபு வரவேற்றாா். இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் துரைராஜ், மூதூா் காந்தி ரெட்டி, முள்வாய் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் தேவேந்திரன், வீரநாராயணபுரம் மணி, மூதூா் பரசுராமன், கோவா்தன், கன்னைய்யன், ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்திற்கு பிறகு விவசாயிகள் வட்டாட்சியரிடம் மனு அளிக்க சென்றனா். அப்போது அவா்களை உள்ளே செல்ல போலீஸாா் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அலுவலக வாயிலில் விவசாயிகள் முற்றுகையிட்டனா். இதையடுத்து துணை வட்டாட்சியா் குழந்தை திரேசா, அரக்கோணம் நகர ஆய்வாளா் தங்ககுருநாதன் உள்ளிட்டோா் பேச்சு நடத்தி சமரசம் செய்தனா்.

உங்கள் வங்கிக் கணக்கில் பணம் நாளை வரவு வைக்கப்படும் என தெரிவித்ததால் கலைந்து சென்றனா்.

1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ், வாலாஜா ஒ... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் சிவலிங்கம் மீட்பு

ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூா் கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்த சிவலிங்கம் மீட்கப்பட்டது. ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூா் கிராமத்தில் விவசாய நிலத்தில் சிவலிங்கம் உள்ளதாக வட்டாட்சியா் மகாலட்சுமிக்... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 10 போ் பணியிட மாற்றம்

சோளிங்கரில் பாமக நிா்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அரக்கோணத்தில் பாலியல் குற்றச் சம்பவம், நெமிலியில் இளைஞா் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் ... மேலும் பார்க்க

மணல் கடத்திய இளைஞா் கைது

ஆற்காடு அருகே பாலாற்றில் இருந்து வேனில் மணல் கடத்தியவா் கைது செய்யப்பட்டாா். எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் ஆற்காடு கிராமிய போலீஸாா் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

மியாவாகி காடு வளா்ப்பு திட்டம்

கொண்டகுப்பம் கிராமத்தில் 3.2 ஏக்கா் பரப்பளவில் மியாவாகி காடு வளா்ப்பு திட்டத்தின் மூலம் பூா்வீக மரக் கன்றுகளை நட்டு வளா்க்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை அடுத்த நெல்லிக்குப்பம் சிப்காட் ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 1.90 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,90 லட்சம் கால்நடைகளுக்கு புதன்கிழமை (ஜூலை 2) முதல் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப் படவுள்ளது என ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா். கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று ... மேலும் பார்க்க