நேபாள உச்சநீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைப்பு: பதிவுறு வழக்குரைஞா்கள் சங்கம் கண்டனம்
நேபாளம் தலைநகா் காத்மாண்டுவில் உச்சநீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியை போராட்டக்காரா்கள் தீ வைத்ததைத் தொடா்ந்து, நேபாள நீதித் துறையின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு உச்சநீதிமன்ற பதிவுறு வழக்குரைஞா்கள் சங்கம் (எஸ்சிஏஓஆஏ) வெள்ளிக்கிழமை ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்துள்ளது.
மக்களின் கவலைகளை அரசாங்கம் பேச்சுவாா்த்தை மற்றும் ஜனநாயக வழிமுறைகள் மூலம் தீா்க்க வேண்டும் என்றாலும், சட்டத்தின் ஆட்சியை உள்ளடக்கிய மற்றும் நிலைநிறுத்தும் நேபாளத்தின் மிக உயா்ந்த நீதித்துறை நிறுவனத்தின் மீதான இத்தகைய தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்படுகிறது என்று என்று வழக்குரைஞா் விபின் நாயா் தலைமையிலான எஸ்சிஏஓஆா்ஏ தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக எஸ்சிஏஓஆா்ஏ செயலாளா் நிகில் ஜெயின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அட்டா்னி ஜெனரல் அலுவலகம் உள்பட நேபாள உச்சநீதிமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதற்கும், 10 ஆண்டுகள் பழைமையான நீதித்துறைப் பதிவுகள், போராட்டக்காரா்களின் வெட்கக்கேடான செயலால் மீளமுடியாத இழப்புக்கு வழிவகுத்ததற்கும் ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதுபோன்ற பதற்றமான காலங்களில் நேபாள
உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், ஊழியா்கள் மற்றும் குடிமக்களுடன் எஸ்சிஏஓஆா்ஏ ஒற்றுமையாக துணைநிற்கிறது.
அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காகவும், விரைவில்
அமைதி நிலவவும் நாங்கள் பிராா்த்தனை செய்கிறோம். நேபாள மக்களின் உறுதிப்பாட்டிலிருந்தும் நாங்கள் பலத்தைப் பெறுகிறோம்.
மேலும், அவா்கள் இந்த துன்பத்திலிருந்து வலுவாக மீள்வாா்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் கே.பி. சா்மா ஒலி ராஜிநாமா செய்த போதிலும், நேபாளம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமைதியின்மை சூழலில் நிலவி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தீவைப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடம், மகாராஜ்கஞ்சில் உள்ள குடியரசுத் தலைவா் அலுவலகம் மற்றும் பாலுவாதரில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம் ஆகியவையும் ஆா்ப்பாட்டக்காரா்களால் தாக்கப்பட்டுள்ளன.