செய்திகள் :

நேபாள வன்முறையில் 51 பேர் பலி! 1,300 பேர் காயம்!

post image

நேபாளத்தில் போராட்டத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்ததற்கு எதிராகவும் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராகவும் அந்த நாட்டு இளைஞா்கள் கடந்த திங்கள்கிழமை தீவிர போராட்டத்தைத் தொடங்கினர். அவர்களை காவல்துறை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறையில் 19 இளைஞர்கள் இறந்தனர்.

தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது அந்நாட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா் மற்றும் பிரதமா் இல்லங்களுக்குப் போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். இதுதவிர முன்னாள் பிரதமா்கள், அமைச்சா்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து, பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

போராட்டம் கட்டுக்கடங்காத வன்முறையாக மாறியதைத் தொடா்ந்து, நாட்டில் பாதுகாப்பை நிலைநாட்டும் பொறுப்பை ராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது.

நேபாளத்தில் இடைக்கால பிரதமரை நியமிக்கும் பணியில் இளைஞர் போராட்டக்குழு ஈடுபட்டுள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, இடைக்கால பிரதமராக ஆவார் என்று கூறப்படுகிறது.

இதற்காக ராணுவ அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தற்போது அங்கு காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் நேபாளத்தில் இதுவரை நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. வன்முறையில் சுமார் 1,300 பேர் காயமடைந்துள்ளனர்.

நேபாளத்தில் சுமார் 12,500 சிறைக் கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளனர். நாட்டில் சட்டம் - ஒழுங்கை சீரமைக்கும் பணியில் அந்த நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.

Nepal Gen Z protests: Death toll hits 51, 12k+ prisoners at large

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயின்று வந்த மாணவி... மேலும் பார்க்க

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து உயர்நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: மேற்கு வங்கம் வழியாக நாடு திரும்பிய 2,000 இந்தியர்கள்!

நேபாளத்தில் வன்முறை வெடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து சுமார் 2,000 இந்தியர்கள் மேற்கு வங்கத்தின் பனிடான்கி எல்லை வழியாகத் தாயகம் திரும்பியுள்ளனர். நேபாள நாட்டில் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டது ... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயிலில் மோரீஷஸ் பிரதமர் வழிபாடு!

மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராமகூலம் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். இந்தியா உடனான நல்லுறவை மேலும் விரிவாக்கும் நோக்கில், மோரீஷஸ் பிரதமா் ராமகூலம் 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்குக்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் தாயார் குறித்த ஏஐ விடியோவால் சர்ச்சை! காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள சித்திரிப்பு விடியோவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், 2022 ஆம் ஆண்டில் காலமானார். இந்த நிலையில், அவ... மேலும் பார்க்க

கூகுள் செய்யறிவு பயன்பாட்டில் ஹிந்தி அறிமுகம்!

தேடுபொறி தளமான கூகுள் தன்னுடைய செய்யறிவு பயன்பாட்டில் இந்தியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஏஐ மோட், ஜெமினி 2.5 என்ற இயங்குதளத்தால் இயக்கப்படுகிறது.கூகுள் தேடுபொறி இணையதளம், முதலில் கடந்த மார்ச் மா... மேலும் பார்க்க