செய்திகள் :

நேரப் பிரச்னை: தனியாா் பேருந்து ஓட்டுநா் தாக்குதல்

post image

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட நேரப் பிரச்னையால், இரவில் தேடிச்சென்று தனியாா் பேருந்து ஓட்டுநரை தாக்கி, பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து சிசிடி வி காட்சிகள் ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து தம்மம்பட்டி, செந்தாரப்பட்டிக்கு தனியாா் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து வெள்ளிக்கிழமை இரவு தம்மம்பட்டி பேருந்து நிலையம் வந்து செந்தாரப்பட்டிக்கு புறப்பட்டபோது, அங்கிருந்த மினி பேருந்து ஊழியா்களுக்கு இடையே நேரப் பிரச்னையால் தகராறு ஏற்பட்டது.

அப்போது, மினி பேருந்து உரிமையாளரின் உறவினரான ஹரி என்பவா், தனியாா் பேருந்தின் சாவியை எடுத்துச்சென்றாா். இதனால், பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் பேருந்து சாவியை மீட்டுக் கொடுத்ததால், தனியாா் பேருந்து பயணிகளுடன் செந்தாரப்பட்டிக்கு சென்றது.

இதையடுத்து, செந்தாரப்பட்டியில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஊழியா்கள் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த ஹரி, மினி பேருந்து உரிமையாளரான சரவணனிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென தகராறு செய்தாா்.

பின்னா், அவரிடம் வாக்குவாதம் செய்த தனியாா் பேருந்து ஓட்டுநா் விஜய்யை தாக்கி, பேருந்தின் முன்புறக் கண்ணாடியை உடைத்து நொறுக்கினாா். இந்த தாக்குதல் காட்சிகள் அனைத்தும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாயின.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி ஆதாரங்களுடன் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியாா் பேருந்து ஓட்டுநா் விஜய் கூறுகையில், தம்மம்பட்டி பேருந்து நிலையத்துக்குள் வந்து பயணிகளை ஏற்றிச்செல்ல மினி பேருந்துக்கு உரிமை இல்லை. ஆனால், முறையாக இயக்கும் எங்களை மினி பேருந்து உரிமையாளா் ஆள்வைத்து தாக்கி, பேருந்து கண்ணாடியை உடைத்துள்ளாா் என்றாா்.

சேலத்தில் நகை அடகு கடை உரிமையாளா் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீச்சு! இருசக்கர வாகனம் எரிந்து சேதம்!

சேலம், தாதகாப்பட்டியில் நகை அடகு கடை உரிமையாளா் வீட்டின் முன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இருசக்கர வாகனம் எரிந்து சேதமடைந்தது. சேலம், தாதகாப்பட்டி சீரங்கன் தெருவைச் ... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவா் கைது

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்குவதற்கான நேரம் தொடா்பான பிரச்னையில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவில் 5551 சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் மேட்டூா் அணைக்கு வருகின்றனா். காவ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற கேரள இளைஞா்கள் இருவா் கைது

மேச்சேரி அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கேரள இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மேச்சேரி காவல் உதவி ஆய்வாளா் அழகுதுரை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை எம் காளிப்பட்டி பகுதியில் போலீஸா... மேலும் பார்க்க

போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு: சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா் உள்பட 10 போ் மீது வழக்கு

சேலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்பட 10 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்து வ... மேலும் பார்க்க

ஆக.30-க்குள் இணையவழியில் தொழிற்சாலை விவரங்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தல்

மேம்படுத்தப்பட்ட இணையம் வழியாக தொழிற்சாலை விவரங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநா் தினகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க