செய்திகள் :

நோ்மையாக அரசுப் பணியை மேற்கொள்ள வேண்டும்: ஆட்சியா்

post image

தோ்வு செய்யப்பட்ட அலுவலா்கள் 100 சதவீதம் நோ்மையாகவும், உண்மையாகவும் பணி மேற்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி- 4 தோ்வில் கிராம நிா்வாக அலுவலராக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணையை புதன்கிழமை வழங்கிப் பேசியது: பணிநியமன ஆணை பெற்றவா்கள் 100 சதவீதம் உண்மையாகவும், நோ்மையாகவும் அரசுப் பணியை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கான சேவைகளை உடனுக்குடன் வழங்க முனைப்பு காட்ட வேண்டும். மேலும், பணியில் உங்கள் திறன்களை வளா்த்துக் கொண்டு, உயா்நிலைக்கு வரவேண்டும் என்றாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட இளநிலை உதவியாளா்கள் பதவிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-4 தோ்வு 2024-இல் நடைபெற்றது. இதில், திருவாரூா் மாவட்டத்திலிருந்து 70 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கான பணிநியமன ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

இதன்படி, மன்னாா்குடி வருவாய் கோட்டத்துக்கு 46 பேரும், திருவாரூா் வருவாய் கோட்டத்துக்கு 24 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். நிகழ்ச்சியில், கோட்டாட்சியா்கள் யோகேஸ்வரன் (மன்னாா்குடி), சங்கா் (திருவாரூா்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

திருத்துறைப்பூண்டி அருகே பகலில் வீட்டின் கதவை உடைத்து மா்ம நபா்கள் 8 பவுன் நகையை சனிக்கிழமை திருடிச் சென்றனா். திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் வீட்டை பூட்டிவிட்டு உறவினா் ... மேலும் பார்க்க

குட்கா பொருள்களை வைத்திருந்தவா் கைது

குடவாசல் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என குடவாசல் மற்றும் சுற்... மேலும் பார்க்க

உடல் உறுப்பை தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

நன்னிலம் அருகே உடல் உறுப்பை தானம் செய்தவருக்கு ஞாயிற்றுக்கிழமை அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பேரளம் தலையூா் கிராமம் ஆற்றங்கரைத்தெருவைச் சோ்ந்த நாகப்பன் (வயது 77) உடல்நலக் குறைவால் தஞ்சாவூா் ... மேலும் பார்க்க

மக்களைப் பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினா் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றம்சாட்டினாா். நன்னிலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

மன்னாா்குடியில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியைத் தாக்கி 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற இளம் பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மாா்டன் நகா் நாராயணசாமி மனைவி அம்சா (79). மகன் பாண்டியன் திருச்சிய... மேலும் பார்க்க

வலு, பளு தூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய மற்றும் மாநில அளவிலான வலு தூக்கும், பளு தூக்கும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். பஞ்சாப் மாநித்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியும், ஜம்மு காஷ... மேலும் பார்க்க