செய்திகள் :

நோயாளியுடன் டிராபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸ்; ஓடி ஓடி உதவிய போலீஸ்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

கேரள மாநிலம் திருச்சூர் மகளிர் காவல் நிலையத்தில் அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருப்பவர் அபர்ணா லவகுமார். திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஒரு நோயாளிக்குத் தீவிர சிகிச்சை அளிப்பதற்காக ஜூபிலி மெடிக்கல் காலேஜிக்கு சீரியஸான நிலையில் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார்.

கோலோத்தும்பாடம் ரோட்டில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ரோட்டில் வரிசையாக நின்றதால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. அப்போது போலீஸ் ஜீப்பில் ரோந்து சென்றுகொண்டிருந்த அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர் அபர்ணா லவகுமார் உடனே வாகனத்தில் இருந்து இறங்கி, சுமார் நூறு மீட்டர் தொலைவில் வேகமாக ஓடிச் சென்று முன் பகுதியில் நெரிசலில் சிக்கியிருந்த வாகனங்களைச் சீரமைத்து ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.

போலீஸ் அதிகாரி அபர்ணா லவகுமார் வேகமாக ஓடியபடியே வாகனங்களை ஒழுங்குபடுத்திய காட்சியை ஆம்புலன்சில் டிரைவர் அருகே இருந்த மருத்துவ உதவியாளர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பெண் போலீஸ் அதிகாரியின் வைரல் வீடியோ
பெண் போலீஸ் அதிகாரியின் வைரல் வீடியோ

போலீஸ் அதிகாரி அபர்ணா லவகுமார் நோயாளிகள் பலருக்கு ஏற்கனவே உதவிகளைச் செய்து கவனம் பெற்றவர் ஆவார். மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இறந்த நபருக்குச் சிகிச்சைக்கான பில் தொகை செலுத்துவதற்காக தனது கையில் கிடந்த தங்க வளையலைக் கொடுத்து உதவி செய்தார்.

கேன்சரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக தனது நீளமான தலைமுடிகளை தானமாக வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தார். இந்த நிலையில்தான் ஆம்புலன்ஸில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நோயாளியைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேகமாக ஓடிச் சென்று உதவியதால் வீடியோ மூலம் வைரலாகி உள்ளார்.

கேன்சர் நோயாளிகளுக்காக தனது நீண்ட கூந்தலைத் தானமாக அளித்த அபர்னா லவகுமார்
கேன்சர் நோயாளிகளுக்காக தனது நீண்ட கூந்தலைத் தானமாக அளித்த அபர்னா லவகுமார்

ஒரு போலீஸ் அதிகாரி எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அபர்ணா லவகுமார் செயல்பட்டுவருவதாக நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

வைரல் வீடியோவைப் பகிர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் அபர்ணா லவகுமார்  கூறுகையில், "அந்த இடத்தில் காவல்துறையைச் சேர்ந்த யார் இருந்தாலும் இதுபோன்றுதான் செய்திருப்பார்கள். அதைத்தான் நானும் செய்தேன். அப்படித்தான் எங்களால் செயல்பட முடியும்" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

WAR 2: நடிகை கியாரா அத்வானியின் பிகினி காட்சியை நீக்கிய தணிக்கை குழு

பாலிவுட்டின் மிகப்பெரிய ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'வார் 2', ஆகஸ்ட் 14 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அயன் முகர்ஜி இயக்கத்தில் உ... மேலும் பார்க்க

உணவு டெலிவரி செய்த முதியவருக்காக 9 லட்சம் நிதி திரட்டி கொடுத்த பெண் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உணவு டெலிவரி செய்ய வந்த முதியவருக்காக, அயர்லாந்து பெண் $22,000 (19.26லட்சம்) டாலர்களை நிதி திரட்டி கொடுத்துள்ளார். வீட்டின் பாதுகாப்பு கேமராவில் பதிவான வீடியோவில் அடிப்படைய... மேலும் பார்க்க

விபத்தில் 6 ஆண்டுகள் படுக்கை; `குழந்தையைப் போல கவனித்த மனைவிக்கு விவாகரத்து பரிசா?'

மலேசியாவைச் சேர்ந்தப் பெண் நூரூல் சியாஸ்வானி. இவருக்கு 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. வாழ்க்கை அற்புதமாகச் சென்றுக்கொண்டிருந்தபோது, வாழ்க்கையி... மேலும் பார்க்க

அயர்லாந்து: ``இந்தியாவுக்கு திரும்பிப் போ'' - சிறுமியை தாக்கிய சிறுவர் கும்பல்; என்ன நடந்தது?

அயர்லாந்தில் கடந்த 8 ஆண்டுகளாக செவிலியர் பணி செய்து வரும் பெண் தன் 2 குழந்தைகள், கணவருடன் அங்கு வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்புதான் அயர்லாந்தின் குடிமக்களாக குடியுரிமை பெற்றிருக்கின்றனர். இ... மேலும் பார்க்க

Rajinikanth: மகளுடன் விமானத்தில் பயணித்த ரஜினிகாந்த்; உற்சாகத்தில் ஆர்ப்பரித்த ரசிகர்கள்

கூலி படத்தின் வெளியீடு நெருங்கி வருகிறது. நடைபெற்று வரும் புரொமோஷன் பணிகளே ஊரெங்கும் ரஜினிகாந்த் ஃபீவரைப் பரப்பி வருகின்றன. இதற்கிடையில் ஒரு கேஷுவலான விமான பயணத்தில் வைரலாகியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்... மேலும் பார்க்க

மும்பை: `புறாக்களுக்கு தீனி போட தடை' - தடுப்பை அகற்றி போராட்டத்தில் குதித்த ஜெயின் மக்கள்

மும்பையில் புறாக்களுக்கு தீனி போட மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இப்பிரச்னை இப்போது போராட்டமாக மாறியுள்ளது. மும்பையில் முக்கிய... மேலும் பார்க்க