செய்திகள் :

பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்

post image

ஆற்றுக்கல் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. விரைவு ரயில்கள் அனைத்தும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆற்றுக்கல் பகவதி அம்மன் கோயிலின் பொங்கல் மகோற்சவ திருவிழா மாா்ச் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவிலுக்கு புதன்கிழமை (மாா்ச் 12) இரவு 10.55 மணிக்கும், மறுமாா்க்கமாக நாகா்கோவிலில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 1.40 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

எா்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக திருவனந்துபுரத்தில் இருந்து எா்ணாகுளத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில்கள் முழுவதும் முன்பதிவில்லா பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

கூடுதல் நிறுத்தம்: கன்னியாகுமரி - புனலூா் பயணிகள் ரயில், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில், மங்களூரு - திருவனந்தபுரம் விரைவு ரயில், மதுரை - புனலூா் விரைவு ரயில், நாகா்கோவில் - மங்களூரு விரைவு ரயில், புது தில்லி - திருவனந்தபுரம் விரைவு ரயில், மும்பை - திருவனந்தபுரம் நேத்ரவதி விரைவு ரயில், செகந்திராபாத் - திருவனந்தபுரம் விரைவு ரயில் மங்ளூரு - கன்னியாகுமரி விரைவு ரயில் உள்ளிட்ட 24 விரைவு ரயில்கள் பயணிகளின் வசதிக்காக சிறாயீன்கீழு, கடகவூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஒரு நிமிஷம் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) தேர்தலுக்கான வேட்பாளராக சோமு வீரராஜுவை பாஜக அறிவித்துள்ளது. எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து ஆந்திர சட்டமேலவை உறுப்பினர்களு... மேலும் பார்க்க

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக கூறி இரட்டைக் குழந்தைகளை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் மகேஷ் சக்லனி. இவருடைய மனைவி சுப... மேலும் பார்க்க

பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விசாரணை!

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுமேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட... மேலும் பார்க்க

சூப்பர் முதல்வர் பேச்சைக்கேட்டு தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: தர்மேந்திர பிரதான்

சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தேசியக் கல்விக் கொள்கயில் கையெழுத்திடாமல் தவிர்த்திருக்கிறது தமிழகம் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியுள்ளார்.மார்ச் மாதம்... மேலும் பார்க்க

பூபேஷ் பாகேல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் போராட்டம்!

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீட்டிற்கு வெளியே காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துற... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் லாரி - வாகனம் மோதல்: 8 பேர் பலி, 13 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை லாரி - வாகனம் மோதியதில் 8 பேர் பலியானார்கள். சிதி-பஹ்ரி சாலையில் உள்ள அப்னி பெட்ரோல் நிலையம் அருகே அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் நட... மேலும் பார்க்க