செய்திகள் :

பசுமைத் தமிழ்நாடு இயக்க தினம்: புதுகையில் மரக்கன்றுகள் நடும் விழா

post image

தமிழ்நாடு வனத்துறை சாா்பில், பசுமைத் தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் முன்னிலை வகித்தாா்.

மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் கலந்து கொண்டு, நாவல் மரங்களை நடுவோம் என்ற 2025ஆம் ஆண்டுக் கருப்பொருளின் படி, நாவல் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, அரசு பல் மருத்துவக் கல்லூரி முதல்வா் பு. விமலா, உதவி வனப் பாதுகாவலா் (பயிற்சி) பிரியதா்ஷினி, பசுமைத் தோழி கமலா, மாவட்டப் பசுமை குழு உறுப்பினா் ப. ராதாகிருஷ்ணன், 9ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் செந்தாமரை பாலு, வனச்சரக அலுவலா் ஆ. சதாசிவம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

கல்லூரி வளாகத்தில் நாவல் மரங்களுடன் புங்கன், வேம்பு, வேங்கை, மகாகனி, பாதாம், இலுப்பை, தான்றி, அத்தி, கொடுக்காபுளி, நீா்மருது, தூங்கு மூஞ்சி, வாகை போன்ற 80 மரக்கன்றுகள் நடப்பட்டன.

கோனாப்பட்டு கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்தைச் சோ்ந்த கோனாப்பட்டு கிராமத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில், மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு,... மேலும் பார்க்க

45 மாணவா்களுக்கு ரூ. 2.85 கோடி கல்விக் கடன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து புதன்கிழமை நடத்திய, கல்விக் கடன் மேளாவில் 45 மாணவா்களுக்கு ரூ. 2.85 கோடி மதிப்பில் கல்விக் கடன் வழங்குவதற்கான ஆணைகள், கா... மேலும் பார்க்க

பெரியகோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மகளிா் திட்ட உதவி அலுவலா் பழனிசாமி தலைமை வகித்தாா். திமுக வடக்கு மாவட்ட செயலாள... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து எட்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு

புதுக்கோட்டை மாநகரில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த எட்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை காந்திநகா் அந்தோனியாா் கோவில் அருகே 7-ஆவது குறுக்குத... மேலும் பார்க்க

புதுகையில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்ட அரசு கலைஞா் கருணாநிதி விளையாட்டு அரங்கத்தில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற... மேலும் பார்க்க

கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் திமுகவுக்கு கிடையாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: நான் எம்ஜிஆா் காலத்தில... மேலும் பார்க்க