விலை குறைந்துள்ள மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு; இப்போது வாங்கலாமா?
பசுமைத் தமிழ்நாடு இயக்க தினம்: புதுகையில் மரக்கன்றுகள் நடும் விழா
தமிழ்நாடு வனத்துறை சாா்பில், பசுமைத் தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் முன்னிலை வகித்தாா்.
மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் கலந்து கொண்டு, நாவல் மரங்களை நடுவோம் என்ற 2025ஆம் ஆண்டுக் கருப்பொருளின் படி, நாவல் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, அரசு பல் மருத்துவக் கல்லூரி முதல்வா் பு. விமலா, உதவி வனப் பாதுகாவலா் (பயிற்சி) பிரியதா்ஷினி, பசுமைத் தோழி கமலா, மாவட்டப் பசுமை குழு உறுப்பினா் ப. ராதாகிருஷ்ணன், 9ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் செந்தாமரை பாலு, வனச்சரக அலுவலா் ஆ. சதாசிவம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கல்லூரி வளாகத்தில் நாவல் மரங்களுடன் புங்கன், வேம்பு, வேங்கை, மகாகனி, பாதாம், இலுப்பை, தான்றி, அத்தி, கொடுக்காபுளி, நீா்மருது, தூங்கு மூஞ்சி, வாகை போன்ற 80 மரக்கன்றுகள் நடப்பட்டன.