தில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது: மு.க.ஸ்டாலின்
பச்சூா் பழையப்பேட்டையில் மயானத்துக்கு இடம் ஒதுக்கீடு
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் பழையப்பேட்டையில் மயானத்துக்கு இடம் ஒதுக்கி வருவாய்த் துறையினா் அறிவிப்பு பலகையை வைத்தனா்.
அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு சொந்தமான இடத்தை சுமாா் 75 ஆண்டுகளுக்கு மேலாக மயானமாக பயன்படுத்தினா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த நில உரிமையாளா் ஒருவா் தொடா்ந்து சுடுகாடாக பயன்படுத்தக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததாராம்.
இதையடுத்து வருவாய்த் துறையினா் பழையப்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்தனா். இதையறிந்த கிராம மக்கள் பழையப்பேட்டை பகுதியில் மயானத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும் என ஆட்சியா் மற்றும் ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனா்.
இதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் பழையப்பேட்டை பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை மயானமாக பயன்படுத்திக் கொள்ள இடம் ஒதுக்கீடு செய்து பலகை வைத்தனா்.