செய்திகள் :

பஞ்சாப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்; முதல்வர் நெகிழ்ச்சிப் பதிவு; பஞ்சாப் முதல்வர் சொன்னது என்ன?

post image

முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று பள்ளிகளில் காலை உணவுத் திட்டம். இந்தத் திட்டத்தை 15.9.2022 அன்று மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு காலை உணவைப் பரிமாறி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து 25.8.2023 அன்று திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து 15.7.2024 அன்று முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளில், இந்தத் திட்டம் 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் - பகவந்த் மான்
முதல்வர் ஸ்டாலின் - பகவந்த் மான்

இந்த நிலையில்தான் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூா் புனித சூசையப் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த திட்ட விரிவாக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்று மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.

மேலும், முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், பகவந்த் மான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டனர்.

தமிழகத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 34,987 பள்ளிகளைச் சேர்ந்த 17 லட்சத்து 53 ஆயிரத்து 257 மாணவ, மாணவியர் பயன் பெறுகிறார்கள்.

தற்போது நகர்புறத்தில் அரசு உதவிபெறும் 2,429 பள்ளிகளைச் சேர்ந்த 3.06 லட்சம் குழந்தைகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பஞ்சாபிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நமது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஊக்கத்தை அளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் - பகவந்த் மான்
முதல்வர் ஸ்டாலின் - பகவந்த் மான்

மாண்புமிகு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்வில் கலந்து கொண்டு எங்களைக் கௌரவித்தார்.

அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அதன் தாக்கத்தைக் கண்ட பிறகு, பஞ்சாபில் இதேபோன்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து, விவாதங்களை நடத்துவதாகக் கூறினார்.

அவரின் இந்த முடிவுக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவரது வார்த்தைகளால் என மனம் மகிழ்ச்சியாலும், பெருமையாலும் நிறைந்திருக்கிறது.

இந்தத் திட்டம் பஞ்சாபிலும் வடிவம் பெறும் நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

நெல்லை ஆணவக் கொலை: கவின்குமார் தந்தையுடன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த திருமாவளவன்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவீன்குமாரின் தந்தை சந்திரசேகரை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர மு.க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் வைத்து சந்தித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன். கவினின் குடு... மேலும் பார்க்க

பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா பராமரிப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோயிலாறு அணை. 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை மாவட்டத்தின் மிக... மேலும் பார்க்க

கர்நாடகா: ஒரே எண்ணில் 4 ஆடம்பர கார்கள், ஆன்லைன் பந்தயத் தளங்கள்; காங்கிரஸ் MLA கைதின் பின்னணி என்ன?

கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே.சி. வீரேந்திரா, “பப்பி” என அழைக்கப்படும் இவர், சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய வியாபாரம் மற்றும் பணமோசடி வழக்கில் சிக்கி அமலாக்க இயக்குநரால் (ED) ஆகஸ்... மேலும் பார்க்க

``தூய்மைப் பணியாளர்கள் வரலட்சுமி உயிரிழப்பு; அரசின் அலட்சியம்தான் காரணம்'' - சீமான் குற்றச்சாட்டு

சென்னைகண்ணகிநகர் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 23) மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். இந்த மரணத்திற்கான காரணம் அரசின் அலட்சியம் மற்றும... மேலும் பார்க்க

`தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து மீண்டும் வீட்டுவிடுங்கள்'- சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கடந்த 11ம் தேதி டெல்லி தெருநாய்கள் விவகாரத்தில் பிறப்பித்திருந்த உத்தரவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தெருநாய்களை பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்கும்படி உத்தரவிட்ட... மேலும் பார்க்க

``தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' - உச்சநீதிமன்றம் தீர்ப்பின் முழு விவரம்

`பிடித்த இடத்திலேயே விட வேண்டும்'தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை விதித்தது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்... மேலும் பார்க்க