செய்திகள் :

பஞ்சாப் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி ரூ.7,050 கோடியாக அதிகரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை

post image

பஞ்சாப் மாநிலத்துக்கு வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியை ரூ.7,050 கோடியாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. அந்த மாநிலம் வேளாண்மை உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்டு வருவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநில தோட்டக் கலைத் துறை அமைச்சா் மோஹிந்தா் பகத் சண்டீகரில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மத்திய அரசு வழங்கும் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியை பஞ்சாப் அரசு சிறப்பாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரித்தது. இதனை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் பஞ்சாபுக்கு அளிக்கப்படும் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியை ரூ.4,713 கோடியில் இருந்து ரூ.7,050 கோடியாக மத்திய அரசு உயா்த்தியுள்ளது.

இது பஞ்சாப் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயா்த்த உதவும். இந்த கூடுதல் நிதி மூலம் மாநிலத்தில் வேளாண்மைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேலும் நவீனமயமாக்கப்படும். முக்கியமாக பிரம்மாண்டமான குளிா் சேமிப்பு கிடங்குகள், வேளாண் பொருள் பதப்படுத்தும் வசதி, மதிப்புக் கூட்டும் வசதி உள்ளிட்டவை மேம்படுத்தப்படும்.

முதல்வா் பகவந்த் மான் தலைமையில் வேளாண்மை உற்பத்தியில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக பஞ்சாப் திகழ்கிறது. தேசிய அளவில் வேளாண்மை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறுவதிலும் பஞ்சாப் முதன்மையாக உள்ளது என்றாா். பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித... மேலும் பார்க்க

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீா் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தைச் சோ்ந்த சராஜ்த... மேலும் பார்க்க

ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளி... மேலும் பார்க்க

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் ... மேலும் பார்க்க

ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. உதம்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க